கொழும்புச் சந்தையில் யாழ் மீன் விற்பனை – அமைச்சர் பீலிக்ஸ் நடவடிக்கை

filix_perera.jpgவடபகுதி கடற் பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களை கெழும்பு நகரில் விற்பனை செய்யும் நிலையங்கள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். வடபகுதி கடற்பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து வடபகுதியில் பெருமளவில் மீன் கிடைத்து வருகிறது.

அங்கு பிடிக்கப்படும் மீன்களை கொழும்பு மாநகரில் வாழும் மக்களுக்கும் பெற்றுக்கொள்வதற்கான விசேட திட்டமொன்றை மீன்பிடித்துறை அமைச்சர் வகுத்துள்ளார். அதன்படி வட பகுதியில் கூடுதலாக உள்ள மீன்களை குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் கொழும்புக்க கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வடபகுதி மீனவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *