பெற்ற குழந்தைக்கு தாய்ப்பாலுடன் விஷம் கலந்து கொடுத்த பே(தா)ய் – குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

தான் பெற்றெடுத்த குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலுடன் விசத்தைக் கலந்துகொடுத்து குழந்தையை கொலைசெய்ய முயற்சிசெய்த தாயை கண்டி பொலிஸார் நேற்று முன்தினம் (14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் துனுவில பிரதேசத்தைச் சேர்ந்த கீதாகுமாரி ரத்நாயக்க (29) என்ற திருமணமாகாத அப்பெண்ணை பொலிஸார் கண்டி மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

கண்டி பெரியாஸ்பத்திரியில் குறை மாத நிலையில் பிரசவித்த இக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தாயினால் பெறப்படும் தாய்ப்பால், தாதி ஒருவரினூடாக குழந்தைக்கு ஊட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை குறித்த தாயினால் தாதியிடம் வழங்கப்பட்ட தாய்ப்பால் நிரம்பிய போத்தலில் தாதிக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து குறித்து தாய்ப்பால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து தாயிடமிருந்து விசப் போத்தலொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரி வெளிநாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பெண்ணின் பிள்ளைகளுக்கு பணிசெய்வதற்காக அக்காவின் வீட்டில் குறித்த பெண் சிறிது காலம் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வேளை இத்தாய்க்கும் அக்காவின் கணவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கலாமென்றும் இதனூடாக இக்குழந்தை பிறந்திருக்காமென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *