கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4.57 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொரன்டாலோ மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் அந்த மாகாணத்தில் இருந்து 87 கிமீ தென்கிழக்கே சுமார் 95 கிமீ ஆழத்தில் இருந்தது.
சேதங்கள் குறித்தும் எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை என அந்நாட்டின் பூகோள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.