மற்றுமொரு முக்கிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார். பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்கள் இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் இந்த பாதாள உலகக் கோஷ்டியினர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து விசேட அதிரடிப் பொலிஸார் தேடுதல் நடத்திய போது இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் இம்மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.