ஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெருவெற்றி பெரும் என்று கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.
கருத்துக் கணிப்புகளை ஒத்து தேர்தல் முடிவுகள் வருமானால் ஜப்பானில் கடந்த அரை நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட இடைவெளி இன்றி தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் தாராளவாத ஜனநாயகக் கட்சி பதவியகல நேரிடும்.
கடுமையான தோல்வி என்று குறிப்பிட்டு அப்படியான ஒரு தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக பிரதமர் டாரோ அஸோ தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் பதவியிலிருந்தும் தான் விலக எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் மிக மோசமான பொருளாதார வீழ்ச்ச்யை சந்தித்த நேரத்தில் ஆட்சி செயத அரசியல் தலைவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபமே தனது வெற்றிக்குக் காரணம் என, பிரதமராக வரக்கூடியவர் எனத் கருதப்படும் யுகியோ ஹடொயாமா தெரிவித்துள்ளார்.