அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கிலிஸ்டர்ஸிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இந்தப் போட்டியின்போது செரீனா நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செரீனா சர்விஸ் போடும் போது புட்டால்ட் (எல்லை கோட்டை தாண்டுதல்) செய்ததாக லைன்ஸ் உமன் (நடுவர்) அறிவித்தார். இதனால் அந்த புள்ளி கிலிஸ்டர்சுக்கு கிடைத்து அவர் வெற்றிபெற்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த செரீனா பெண்நடுவரை நோக்கி உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் நடுவரை மிரட்டவில்லை என்று செரீனா பின்னர் மறுத்து இருந்தார்.
செரீனா தன்னை மிரட்டியதாக லைன்ஸ் உமன் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர். செரீனாவுக்கு ரூ. 5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.