சச்சின் டெண்டுல்கர் இலங்கையில் ஆடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், அதற்காக கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறிய போது வைத்த விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தன் ஃபார்மிற்காக திணறிய போது ஓய்வறையில் ஒரு யானை என்று வர்ணித்தார்.
அதாவது கடந்த ஆண்டு 51 ஒருநாள் போட்டி களில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது 24 இன் னிங்ஸ்களில் 62.10 என்ற சராசரி வைத்திருந்தார். ஆனால் அதே காலக் கட்டத்தில் இந்தியா இரண் டாவதாக துடுப்பெடுத்தாடிய போது அல்லது இலக்கைத் துரத்தும்போது 26 ஓட்டங்களையே சராசரியாக வைத்திருந்தார் என்பதே சஞ்சய் மஞ்சு ரேக்கர் கடந்த ஆண்டு வைத்த விமர்சனத்திற்கு காரணம்.
சச்சின் டெண்டுல்கரிடம் இது பற்றி ஒருவரும் வாயைத் திறக்காததற்கு காரணம் அவரது ஆளுமை அவ்வளவு பெரியது என்று கூறும் போதுதான் ஓய்வறையில் அவர் ஒரு யானை என்று கூறினார் மஞ்சுரேக்கர்.அந்த காலக் கட்டத்தில் டெண்டுல்கர் சுதந்திரமாக விளையாடவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் அவர் எச்சரிக்கையுடன் விளையாடினார். அழுத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. அவுட் ஆகிவிடுவோம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. ஆனால் இப்போது அது போய் விட்டது. அவர் தன் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.
அவர் ஒரு மகத்தான வீரர். ஆனால் அவரும் ஒரு மனிதன்தானே. அவரை 14 வயது முதல் நான் நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவர் தோல்வி, அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் விளையாடினார் என்பதை என்னால் உணர முடிந்தது. இதனால் அப்போது கூறிய கருத்தை இப்போது மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றார். ஆனால், டெண்டுல்கரின் ஆட்டம் தற்போது புத்துணர்வு அளிப்பதாக உள்ளது என்று கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில். அவர் அடித்த பேக் ஃபுட் கவர் டிரைவ், பிரண்ட் ஃபுட் கவர் டிரைவ் ஆகியவற்றைப் பார்க்கும் போது தற்போது அவர் 5 ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றது போல் தெரிகிறது. இப்போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார் என்றார்.