யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு இன்று 10 இலட்சம் பாடப்புத்தகங்களை தரைவழியாக அனுப்பி வைக்கவுள்ளது.
தரைவழியாக அனுப்பி வைப்பதன் மூலம் அதற்கான செலவினம் அரைவாசியாகக் குறைந்துள்ளது என கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.
முந்தைய வருடங்களில் யாழ். குடாநாட்டுக்கு கப்பல் மூலம் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கு மூன்று மில்லியன் ரூபா செலவாகியதாகவும் இம்முறை ஏ-9 வீதியினூடாக இவற்றைக் கொண்டுசெல்வதால் 1.3 மில்லியன் ரூபாவே செலவாகுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
28 வருடங்களுக்குப் பின்னர் இன்று முதல் தடவையாக யாழ். குடாநாட்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக எடுத்துச் செல்லப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்லும் லொறிகள் இன்று காலை 10.30 க்கு கல்வி யமைச்சிலிருந்து யாழ். குடாநாடு நோக்கி புறப்படுகின்றது.