அமெரிக்க – கியூபா உறவுகளை வலுப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்

கியூபா – அமெரிக்க உறவுகளை கெட்டியான முறையில் வளப்படுத்த அமெரிக்கா வரவேண்டுமென கியூபா வெளிநாட்டமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றிய கியூபா வெளிநாட்ட மைச்சர் ரொட்ரிக் மேலும் கூறியதாவது, அமெரிக்கத் தலைவர்களின் ஐ.நா. உரை கியூபாவுடனான உறவுகளை பல ப்படுத்தும் வகையில் அமையவில்லை என்பது துரதிர்ஷ்டமான விடயம்.

சகல நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையிலான உறவுகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக பணியாற்ற வேண்டும்.

அமெரிக்கா, கியூபாவிடையே ஐம்பது வருடங்களாக நல்லுறவு இல்லை. கியூபா ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ ஓய்வுபெற்ற பின்னர் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாறத் தொடங்கின. சென்ற ஏப்ரல் மாதம் கியூபா மீதான சில தடைகள் தளர்த்தப்பட்டன. அமெரிக்கர்கள் தடை யின்றி கியூபா சென்றனர்.

செய்மதிச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அமெரிக்க கம்பனிகளால் கியூபா வில் நடத்தப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடை யேயும் நல்லுறவுகளை வளப்படுத்த உதவுகின்றன. கியூபா பொருட்கள் சேவைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *