பொதுநலவாய நாட்டு நிதியமைச்சர்கள் மாநாடு; அமுனுகம சைப்பிரஸ் பயணம் – துருக்கியில் இடம்பெறும் நாணய நிதிய கூட்டத்திலும் பங்குபற்றுவார்

பொதுநலவாய நாடுகளின் நிதிய மைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம நேற்று சைப்பிரஸ் பயணமானார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர் அமுனுகம, அதனையடுத்து துருக்கிஸ்தான் புல் நகரில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் விசேட மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

பொதுநலவாய நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகைதரும் சர்வதேச நாடுகளின் நிதியமைச்சர்களுடன் அமைச்சர் சரத் அமுனுகம விசேட இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *