மன்னார் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பப்தாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்..
இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களை சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.