எதிர்வரும் 20ம் திகதி பசில் ராஜபக்ஷ தமது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவரது வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியில் வெற்றியீட்டிய ஹேமால் குணசேகர அமைச்சரவை சாரா பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்படக் கூடுமெனவும் எதிர்வரும் 21ம் அல்லது 22ம் திகதிகளில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வழிநடத்தும் நோக்கில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா செய்யவுள்ளார்.