மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குடாநாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நிலைகுலைந்து போய்க் கிடக்கும் வங்கிச் சேவைகளைப் பலப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும்.
நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஆளுநர் கப்ரால் தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) கிளையொன்றைத் திறந்து வைப்பார். இந்த வங்கியின் கிளை திறக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.
அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குதல், வர்த்தக வங்கிகளை அமைத்தல், கட்டுப்பணம் வழங்குதல், வீடமைப்பு நிதி, நிதி முகாமைத்துவம், சொத்துக்களை அபிவிருத்தி செய்தல், காப்புறுதி ஆகிய வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்குடனேயே வங்கிகள் குடாநாட்டில் பலப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
குடாநாடு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அமைதி ஏற்பட்டுள்ளதால் குடாநாட்டில் வங்கிகளின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அச்செழுபகுதிக்குச் செல்லும் ஆளுநர் அபிவிருத்திக்கான கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார். இதற்காக மத்திய வங்கி 1.5 பில்லியன் ஷரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதற்காக 1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதற்கு மேலதிகமாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ஆளுநர் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் இரு கிளைகளைத் திறந்து வைக்கவுள்ளார். அங்கு விவசாய உபகரணங்கள் மற்றும் படகுகளை வழங்குவார்.
அதே நேரம்ää குடாநாட்டில் செயற்படும் வங்கிகளின் உயர் அதிகாரிகளையும் ஆளுநர் கப்ரால் சந்தித்துப் பேசவுள்ளார். சுமார் 200 வர்த்தகப் பிரமுகர்களை நாளை யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் அவர்ää அவர்கள் மத்தியில் உரையாற்றுவதோடுää அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யூ. எம். கருணாரத்னää வங்கிச் செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மத்திய வங்கியின் கிளையொன்று நிறுவப்படுமெனக் கூறினார்.
அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை ஆகிய இடங்களில் மாத்திரமே மத்திய வங்கியின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வர்த்தக நடவடிக்கைகள் விருத்தியடைந்து வரும் போது மத்திய வங்கியின் கிளைகள் அமைப்பது அவசியமென தெரிவித்த கருணாரத்னää முதலீட்டுச் சபை அதிகாரிகளுடன் திராட்சை தோட்டங்களைப் பார்வையிடவுள்ளதாகக் கூறினார்.