ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து; கவனம் செலுததுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார. தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஏதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின் போது இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
உரிய நேரத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருதாகவும் குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் திட்டவட்டமாக நடத்தப்படும எனவும் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்தல்களை நடத்த தீர்மனிப்பது அரசாங்கம் என்றும் அவற்றை நடத்துவது திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அமைச்சா கூறினார்.