மரமுந்திரிகை இறக்குமதி!

மரமுந்திரிகை சார்ந்த தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் பாதுகாப்புக்கருதி தற்காலிகமாக மரமுந்திரிகை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மேலதிக தோட்டப் பயிர் அபிவிருத்தி  அமைச்சர் ஆர். எம். தர்மதாச பண்டா  சமர்பித்திருந்தார்.

அதன்படி 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியாவல் இருந்து 4000 மெட்ரிக் தொன் மரமுந்திரிகை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதற்கான அனுமதிப் பத்திரங்கள் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நிறுவன்ஙகளுக்கு வழங்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *