தமிழ் அமைப்புகளை கைப்பற்றும் பிரிஎப் இன் முயற்சி தோல்வி!!! : த ஜெயபாலன்

BTF_Bannerபிரிஎப் இன் பெட்டிசத்தால் கிங்ஸ்ரன் கவுன்சிலுக்கு 10000 பவுண்கள் செலவு!
பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வரவில்லை!!

(குறிப்பு: அண்மையில் பிரிஎப் பற்றி வெளியான செய்திகள் தொடர்பாக பிரிஎப் இன் கருத்தை அறித்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் : Letter_to_BTF )

ரொல்வேர்த் பெண்கள் பள்ளியில் இயங்கிவரும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு எதிராக பிரிஎப் – பிரித்தானிய தமிழ் போறம் அடித்த பெட்டிசம் தள்ளுபடியானது. பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளித்து சாட்சியமளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வராததால் பெட்டிசம் தள்ளுபடியானது. கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலைக்கு இரண்டாம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 12989 பவுண்களை வழங்க கவுன்சில் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

பிரித்தானிய பிரிஎப் தலைவர் நாதன் குமார் (நல்லைநாதன் சுகந்தகுமார்) கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியைப் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் தகவல்களையும் கிங்ஸ்ரன் எதிர்க்கட்சி ரொறி கவுன்சிலர் ஹவார்ட் ஜோன்ஸிடம் பெப்ரவரியில் இடம்பெற்ற நிதியுதவி அளிப்பது தொடர்பான கூட்டத்திற்கு முன்னதாக வழங்கி இருந்தார். ஆனால் ஒக்ரோபர் 20ல் ஸ்குறுட்னி பனலுக்கு முன்வந்து நின்ற பிரிஎப் தலைவர் நாதன் குமார் தான் வழங்கிய குற்றச்சாட்டுக்களும் தகவல்களும் இரண்டாம் நபரூடாகக் கிடைத்ததாகவும் அக்குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Kinsston_Tamil_Schoolசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9500 பவுண்களை (வரிச்சலுகையையும் உள்ளடக்கி 11 000 பவுண்) கிங்ஸ்ரன் பள்ளி அனுப்பி வைத்தது. கவுன்சில் வழங்கும் நிதியை சுனாமி நிவாரணத்திற்கு அனுப்பியதாக பிரிஎப் குற்றம்சாட்டி இருந்தது. சுனாமி நிவாரணத்திற்கு கவுன்சில் வழங்கும் நிதியை வழங்கியதால் தமிழ் பள்ளிக்கு நிதி அதிகம் வழங்கப்படுகின்றது என்பது குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் சுனாமிக்கு அனுப்பப்பட்ட நிதி கிங்ஸ்ரன் கவுன்சில் வழங்கிய நிதியல்ல. அது கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் வழங்கிய நிதி. 30 000 பவுண்கள் சேமிப்பில் உள்ளது என்றும் அதனை தங்களுக்கு ஒரு கட்டடம் வாங்குவதற்காக சேமிப்பில் வைத்திருந்ததாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் முன்னாள் கவனரும் தற்போதைய உறுப்பினருமான டொக்கடர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். விசாரணைகளில் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

இந்த விசாரணைகளுக்கு முன்னதாக கிங்ஸரன் கவுன்சில் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றாசாட்டுகள் அடிப்படையற்றவை என நிரூபிக்கப்பட்டதாக டொக்டர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். ஆயினும் பிரிஎப் தொடர்ச்சியாக கவுன்சிலின் எதிர்க்கட்சியினூடாக அழுத்தம் கொடுத்து ஸ்குறுட்னி பனலினூடாக இந்த விசாரணையைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகள் பற்றி கருத்து வெளியிட்ட கவுன்சிலர் ஹவாட் ஜோன்ஸ் பிரிஎப் தலைவர் நாதன் குமாரை தான் முதலில் சந்தித்த போது கேள்விப்பட்டவற்றின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது நாதன் குமார் சொல்வதன்படி அவரால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆவணங்களைத் தந்தவர்கள் இது தங்களுடைய ஆவணம் அதற்கு தாங்கள் ஆதரவளிக்கின்றோம் என்று எவரும் முன்வரவில்லை எனவும் கவுன்சிலர் ஹவாட் ஜோன் தெரிவித்தார்.

பிரிஎப் வழங்கிய மேற்படி மொட்டைப் பெட்டிசத்தை விசாரிப்பதற்கு 173 மணித்தியாலங்கள் 10300 பவுண் பொதுப் பணம் செலவிடப்பட்டதாகவும் கிங்ஸ்ரன் கவுன்சில் கணக்கை கண்காணிக்கும் ஓடிட் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓடிட் அலுவலகத்தின் உள்ளக இயக்குனர் ஜெரிமி கைற் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு நிதி உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் கேட்கப்பட்ட தொகையிலும் குறைவான நிதியுதவி போதுமானது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஓடிட்டர் அலுவலகம் சில பரிந்துரைகளையும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு வழங்கி உள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் சார்பில் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியும் கிங்ஸ்ரன் கவுன்சிலும் நீண்ட காலமாக இணைந்து செயற்படுகின்றது என்று தெரிவித்த கிங்ஸ்ரன் கவுன்சிலர் பொப் ஸ்ரீட் கவுன்சில் வழங்கும் நிதியுதவி குறைக்கப்பட்டால் தமிழ் பள்ளி நிதிக் கஸ்டத்தை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

பிரிஎப் பெட்டிசத்தின் பின்னணி : 

தொண்ணூறுக்களின் ஆரம்ப காலத்தில் தங்களை தமிழ் மக்களின் ஏகதலைமையாக அறிவித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள் தமிழ் பள்ளிகள் ஆலயங்கள் என்பனவற்றின் நிர்வாகத்தில் இருந்த ஓட்டை உடைசலுகளுக்குள் புகுந்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்குலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி நிறுவனங்களாக இயங்கிய அமைப்புகள் அந்தக் கட்டுப்பாட்டை தங்களுக்குள் வைத்திருந்தன. பிரித்தானியாவிலும் பிரித்தாகிய தமிழ் போறம் என்று பெயரளவில் இயங்கினாலும் பிரித்தானிய ரைகர் போறம் என்றளவிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்தது.

Surrey_Tamil_Schoolஅந்த வகையில் 1986ல் உருவாக்கப்பட்ட கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் நிர்வாகத்தில் இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் குடும்பத்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அரசியல் சாராத பலரும் அப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ளனர். அவர்கள் இலங்கை அரசியலை பிள்ளைகளின் கல்வியுடன் கலக்கத் தேவையில்லை என்கின்றனர். ஆனால் பள்ளியின் நிர்வாகத்தில் இருந்த பிரிஎப் உறுப்பினர்கள் சிலர் ஏனைய அமைப்புகள் போல் கிங்ஸ்ரன் பள்ளியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் கடந்த ஆண்டு யூன் 7ல் போட்டியாக மற்றுமொரு பள்ளியை ஆரம்பித்தனர். சறே தமிழ் பள்ளி என்ற பெயரில் இயங்கும் இப்பள்ளி கோம்பே ஆண்கள் பள்ளியில் செயற்படுகின்றது. விஜயகுமார், விமலதாசன், சிவானந்தராசா, டொக்டர் மகிதரன், டொக்டர் புவி ஆகியோரே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர். ‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் – கிங்ஸ்ரன் பிள்ளைகளின் பெயரில் மோதல்’ என்ற தலைப்பில் லண்டன் குரலின் 24 இதழில் இதுபற்றிய விரிவான செய்தி வெளியானது.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடியாது போனதால் கிங்ஸ்ரன் பள்ளிக்கு பல வகையிலும் பிரிஎப் இல் உறுப்பினராக இருந்தவர்கள் நெருக்கடி வழங்கினர். மொட்டைத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. தங்கள் புதிய பாடசாலைக்கு மாணவர்களையும் பெற்றோரையும் கவர்ந்திழுக்கும் போட்டி ஒன்றும் அங்கு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பழிவாங்கலின் தொடர்ச்சியாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளி மீது பெட்டிசங்களும் அடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பிரிஎப் உறுப்பினர்கள் இருந்தனர் என்பதையும் அன்று லண்டன் குரலில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

Suren_Surendiranஇது தொடர்பாக பிரிஎப் இன் அப்போதைய தலைவர் சுரேன் சுரேந்திரனிடம் லண்டன் குரல் இதழ் 25க்காக ஒரு நேர்காணலைச் செய்திருந்தோம். அப்போது ‘பிரித்தானிய தமிழர் பேரவை, கோயில்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் நிர்வாகங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக  அண்மைக்காலமாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. இவ்வாறான சம்பவங்கள் 1991ல் லண்டணில் இடம்பெற்றது. இவ்வாறான விசயங்களை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொள்கிறதா?’ எனக் கேட்ட போது ‘எனக்கு அந்த குற்றச்சாட்டுப் பற்றி தெரியாது. எங்கள் அமைப்பு நான் சொன்னமாதிரி, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகள், அட்டூழியங்களை சர்வதேச ரீதியில வெளிக்கொண்டு வந்து சர்வதேச அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு எற்படுத்தவது தான் எங்களுடைய நோக்கம். குறிக்கோள். அவ்வளவு தான். வெல் டிபைன் கொன்ஸ்ரிரியூசன். தமிழ் ஸ்கூல் கோயில் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.’ என்று பதிலளித்தார்.

அத்துடன் விட்டுவிடாமல் ‘கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை, பிரித்தானிய தமிழர் பேரவை பாடசாலை நிர்வாகத்தில் தலையீடு செய்ததாக நேரடியாக குற்றம்சாட்டி உள்ளது.’ எனக் கேட்டபோது ‘நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை. ஆனால் நான் போய் நாளைக்கு ஒரு களவு செய்தால் அதை தமிழ் போறம் செய்தது என்று சொல்லேலாது என்ன. பிளவுகள் அதுகள் இதுகளுக்கு சும்மா தமிழ் போறம் காரணம் என்று சொல்றது எல்லாம் சில்லறைக் கதையல்.’ எனப் பதிலளித்தார்.

ஆனால் ஒக்ரோபர் 20ல் பிரிஎப் இன் இப்போதைய தலைவர் விசாரணைக் குழுவின் முன் தோன்றி மண்கவ்வியுள்ளார். பிரிஎப் நேரடியாக தன்னார்வ நிறுவனங்கள் தமிழ் பள்ளிகள் ஆலயங்களில் தலையீடு செய்வதும் தமது கட்டுப்பாட்டுக்குள் வராத அமைப்புகள் மீது தங்கள் உறுப்பினர்களை கொண்டு பெட்டிசம் அடிப்பதும் மொட்டைக்கடிதம் அடிப்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

Seevaratnam_Nஇதே போன்றதொரு முயற்சி டொக்கடர் நித்தினானந்தனின் வெஸற் லண்டன் தமிழ் பாடசாலையில் சிவயோகம் சீவரத்தினம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிவடைந்தது. சிவயோகம் சீவரத்தினம் ஆர் ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆர் ஜெயதேவன் தடுத்து வைக்கபட்ட காலத்தில் சிவயோகத்தின் பலகையை மாட்டி சிலநாட்கள் ஆலயத்தை உரிமை கொண்டாடினார். அது தோல்வியில் முடியவே அக்ரன் கார் ரென்ரலின் இடத்தை பல மடங்கு விலை அதிகம் கொடுத்து (900 000 பவுண்) வாங்கி ஈழபதீஸ்வரருக்குப் போட்டியாக ஆலயம் கட்டத்திட்டமிட்டார். ஆனால் அப்பகுதி கவுன்சில் கோயில் கட்ட அனுமதி மறுத்துவிட்டதால் மீண்டும் மண் கவ்வினார்.

அண்மையில் டெய்லி மிரர் மற்றும் சண் பத்திரிகைகளில் வெளியான உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் உண்ணாவிரத காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டது பற்றிய செய்தியை ரிவைஓ உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிஎப் உறுப்பினர்களே கசியவிட்டதாகவும் உண்ணாவிரதத்தில் முன்னின்ற தமிழ் இளையோர் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இவை தொடர்பான பிரிஎப் இன் நிலைப்பாட்டை அறிய பிரிஎப் உடன் தொடர்பு கொண்ட போது அதன் தவைவர் நாதன் குமார் அங்கிருக்கவில்லை. எமது தொலைபேசி இலக்கத்தை அவருக்கு வழங்குவதாக அலுவலக உதவியாளர் ஜனா தெரிவித்தார். நாதன் குமார் தொடர்பு மேற்கொள்ளாமையால் அவருக்கும் பிரிஎப் முக்கியஸ்தர் சிலருக்கும் எமது கேள்விகளை மின் அஞ்சலினூடாக அனுப்பி வைத்திருந்தோம் அவை எதற்கும் எமக்கு பதிலில்லை. அதனால் அக்கேள்விகளை தேசம்நெற் இணையத்தில் பிரசுரிக்கின்றோம். Letter_to_BTF அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அவற்றினை லண்டன் குரலிலும் பிரசுரிப்போம்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • santhanam
    santhanam

    அட பாவி டாக்குத்தர்மாருக்கும் எஞ்ஞினியார் மாருக்கும் அ.ஆ.இ.ஈ படிப்பிக்கிற பாடசாலையில் என்னவேலை. உங்கடை தொழிலை போய்பாருங்கோ. புலியிடம் சேட்விக்கெற் இல்லாதொழில் நிறையவுண்டு என்றதிற்கு இவர்கள் உதாரணம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உவர்களெல்லாம் சமுதாயத்தின் காவலர்களா?? உவர்களை வளர்த்து விட்ட சமுதாயத்தைத் தான் நான் முதலில் குறை கூறுவேன். இன்று வளர்த்து விட்ட அந்தச் சமுதாயமே, உவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். நல்லவேளை ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் கோழி பொரிச்ச எண்ணெய்யை ஊற்றியது போல் பாடசாலையிலும் ஊற்றாமல் விட்டார்கள். உவர்களை மனிதர்களாக மதிப்பதே தவறு.

    Reply
  • a
    a

    ஆங்கிலத்தில தமிழ் படிபிச்ச கிங்க்ஸ்டன் தமிழ் பாடசாலை இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டியும் ஒண்டுதான்

    Reply