இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் இயக்கம் மறைத்து வைத்திருந்த அதிசக்தி வாய்ந்த பெருமளவு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணா ரத்ன தெரிவித்தார்.
இந்த வெடிபொருட்கள் பிளாஸ்டிக் பரல்களில் இடப்பட்டு வெள்ளைமுள்ளி வாய்க்காலில் இரு இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இந்தத் தேடுதலின் போது 15 கிலோ கிராம் எடையுள்ள 74 பொறிக்குண்டுகளும் ஒரு கிலோ கிராம் எடையுள்ள 38 பொறி குண்டுகளும் ஐந்து கிலோகிராம் எடையுள்ள இரு கிளைமோர் குண்டுகளும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள 10 கிளேமோர் குண்டுகளும் மீட்கப்பட்டன.
இது தவிர 500 கிராம் எடையுள்ள 12 வெடிபொருள் பெட்டிகள், 500 கிராம் எடையுள்ள 11 பொறிக் குண்டுகள் புலிகளால் தயாரிக்கப்பட்ட 125 கைக்குண்டுகள், புலிகளின் தமிழன் படையணிக்கென தயாரிக்கப்பட்ட 81 குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிப் பாகங்கள், எம். பி. எம். பி. குண்டுகள் 200, 5 கிலோகிராம் எடையுள்ள 27 குண்டுகள் 12.07 மற்றும் 7.62 மி.மீ. ரக ரவைகள் 10 ஆயிரம் ஆர்.பி.ஜி. குண்டுகள் 7, ஆர்.பி.ஜி. சார்ஜர்கள் 4, புலிகளின் பாண்டியன் படையணிக்கென தயாரிக்கப்பட்ட 16 கிளேமோர் குண்டுகள் என்பனவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
வெள்ளை முள்ளிவாய்க்காலின் மற்றொரு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 125 கைக்குண்டுகளும் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 81 கைக் குண்டுகளும் 5 கிலோகிராம் எடையுள்ள 27 குண்டுகளும் 16 ‘பாண்டியன்’ குண்டு களும் மீட்கப்பட்டுள்ளன.
Ranjit
What happen to the large haul of dollars and gold unearth in the north and handed over to government by the army?
appu hammy
THESE ALL JUST POLITICAL BOMBS FOR THE NEXT ELECTION.
As Ranjit points out, there were large haul of foreign currency and gold found in LTTE area, what has happened to this?
Good try! Do the powers that be, think that they can hoodwink all the people, all the time?