சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தழிழீழ மக்களே!

இந்த நாள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள். தழிழ் மக்களிடம் இருந்த எல்லா நகைகளையும்  பறித்து தமிழீழ வைப்பகத்தில் வைத்திருந்த போது மகிந்தவின் கொள்ளையர் சூறையாடிச் சென்றுவிட்டதால் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள்.

இந்த நாள் ஒரு பொல்லாத நாள். புலம் பெயர் பொறிக்கிகள் சிலர் என் படத்தைப் போட்டு டயறி அடித்து, கார்த்திகைப் பூச் செய்து BTF உங்களுக்கு காதிலை பூச் சுத்தும் நாள்.  கலண்டர் தயாரித்து விற்கும் ஒரு காசுழைக்கும் நாள்.

இந்த நாள் வெண்புறா கட்டியவர்கள் கக்கூஸ் கட்டிக் கணக்கு காட்டும் ஒரு எளிய நாள்.

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

புது மாத்தளனில் மகிந்தவின் ஆக்கிரமிப்பு படைகள் போட்டுத் தள்ளியது போக மிச்சம் மீதி இருக்கும் மக்களே! அந்த நாள் நான் வணங்கா மண் கப்பல் வரும் வந்து என்னையும், மனிசி பிள்ளைகளையும் ஏத்திக்கொண்டு போகும் என்று எண்ணிக் கொண்டிருந்த நாள். உந்த லண்டன் வரதர் கப்பல் விடுவார் என்று நான் பார்த்துக்கொண்டிருக்க ரீல் விட்ட நாள்.

நான் வருடம் தோறும் கார்த்திகை 27ஆம் நாளன்று நீச்சல் குளத்தில், என் குடும்பத்துடன் நீராடி விட்டு, உலகம் முழுக்க பரவியிருக்கும் அரைநாக் கொடி மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். ஏன் நான் உங்களை தொப்புள் கொடி உறவுகள் என்று அழைக்காமல் அரைநாக்கொடி என்று அழைக்கிறேன் என பலர் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை முள்ளி வாய்க்கால் தண்ணியில் தோய்த்தெடுத்து அம்மணமாகக் போட்டிருந்த படத்தில் காணப்பட்ட அரைநாக் கொடியைப் பாத்து தம்பிகள் லண்டன் சாந்தனும் றெஜியும் என்னை அழைத்து, அண்ணா அரைநாக் கொடியுடன் உங்கள் படத்தைப் பார்த்ததும் நாம் ஆனந்தத்தில் அழுது விட்டோம் அண்ணா என்றார்கள். இனி வரும் காலங்களில், நீங்கள் ஆற்றும் மாவீரர் செய்தியெல்லாம் தொப்புள் கொடி என்று வரக்கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். சுயபுத்தியில் எதுவுமே இன்றுவரை செய்துவராத நான் இந்த வாக்கிய மாற்றத்தையும் பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

Piraba_in_Swimmingpoolஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

27ஆம் நாளன்று வெளிவர வேண்டிய செய்தி ஏன் 26ம் திகதியே தேசம் நெற்றில் வருகிறதே என்று நீங்கள் திகைத்துப்போய் இருப்பீர்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாக்களே! நீங்கள் ஆனந்தவிகடன் புத்தகத்தை தவறாது வாங்கிப் படித்து அதன் மூலம் அறிவைப் பெருக்கி அந்த அறிவை வைத்து எனக்கு ஆலோசனை வழங்குவதும் அந்த ஆலோசனைகளை நான் நீச்சல் குளத்தில் இருந்தபடியே செவிமடுத்து செயலாற்றி வந்ததும் ஒரு பெரிய ரகசியம் அல்ல.

அந்த வகையிலே அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகையில் வந்திருக்கும் கட்டுரை புலம் பெயர் மாக்கள் எனக்கு நாசூக்காக கொடுத்த ஆலோசனை என்பதை நான் அறிவேன்.

PottuAmman_and_Pirabaharanபொட்டன் எனக்கு சுத்திப் போட்டு தான் தலைவனாகப் பாக்கிறான் என்று எனக்கு எப்போவோ தெரியும். ஆனால் ஆனந்த விகடன் புத்தகத்தில் அறிக்கை விட்டு விட்டு மாவீரர் செய்தியை அவனே வாசிக்க முற்படுவான் என்று வற்றாபழை அம்மனறிய நான் யோசிக்கவில்லை. ஆனால் உண்மையிலையே சொல்கிறேன். பொட்டன் மாவீரர் செய்தி வாசிக்கப் போறான் என்றதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. நான் ஏன் சிரித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அவன் தனக்கென ஒரு படையே வைத்திருக்கிறான் என்பதால் அவனை சுலபத்தில் போட்டுத் தள்ளவும் முடியாது.  அதனால்தான் பொட்டனுக்கு முதல் மாவீரர் செய்தி வரவேண்டும் என்று என் குடும்பத்துடன் கலந்தாலோசித்து 26ம் திகதியே செய்தியை வெளியிட்டு பொட்டன் முகத்தில் கரியைப் பூசி உங்களை மகிழ்விக்கலாம் என்று முடிவு செய்தேன். உண்மையில் நானா யோசிச்சு இயக்கத்திலை எடுத்து செயல்படுத்திய ஒரே ஒரு முடிவு இதுதான்.

Piraba_Aliveஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நான் இறந்து விட்டேன் என்று ஒரு பிரிவும் நான் இறக்கவில்லை என்று ஒரு பிரிவும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள் என்று உளவு ஆய்வுகள் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுகின்றன. எல்லா நாட்டிலையும் குளிரையும் பொருட்படுத்தாம எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வாய் கிழியக் கத்திய உங்களுக்குத் தெரியும் எனக்கு என்ன நடந்தது என்று. வெளிநாட்டில் இருக்கும் சொத்துப் பத்தைச் சுருட்ட நினைக்கும் துலைவாருக்கும் தெரியும் எனக்கு மகிந்த அரசும், இந்தியாவும், சீனாவும், இன்னும் சில நாடுகளும் சேந்து என்ன செய்தன என்று.  இந்த வருடம் என் பிறந்த நாளை எப்படி எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். நினைச்சாலே அழுகை அழுகையா வருது. புலம் பெயர்ந்துபோன நீங்களும் எனக்கு கட்அவுட் கட்டி ஆளுயரத்திற்கு கேக்கும் வெட்டி காசு கலெக்ஷன் விழாவும் வைக்கும் திட்டத்தோடு இருந்ததiயும் நான் நன்கு அறிவேன்.

போன வருசம் என்ரை உரையிலை சொன்னனான் உவன் மகிந்த ஒரு சரியான ஆளெண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டு. யாரோ சொன்னாங்கள். உவன் மகிந்தவுக்கு நல்லாத் தழிழ் தெரியும் என்று. அந்த நம்பிக்கையில் மகிந்தா நீ ஒரு நேர்மையான ஆள் என்றால் இந்தப் பிரச்சனைக்கு இந்த வருடத்துக்குள் ஒரு முடிவு கொண்டு வா என்று எச்சரித்தது உண்மைதான். ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டதை பிழையா விளங்கியதால், நான் முள்ளிவாய்க்கால் வரைக்கும் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நாசமாய் போன மகிந்த நான் சொன்ன முடிவை தாறுமாறா விளங்கி ஆகாயத்தாலை அடிச்சான். தரையாலை அடிச்சான். காரை முள்ளு குத்த, கரம்பை முள்ளுக் கால் கிளிக்க, நாயுருவி தோலுருவ, யங்கம் பத்தைக்குள் பதுங்கியதும், நாய் போல நான் ஓடியதும் இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பெல்லாம் கிடு கிடுக்கிறது.

வன்னி மக்கள் எப்பிடித்தான் ஒன்றரை வருடங்களுக்கு மேல் இந்தத் துன்பத்தை எனக்காக தாங்கினார்களோ தெரியாது. ஒரு தலைவனைக் காப்பாற்றுவதற்கு எந்தவிதமான துன்பங்களையும் தாங்க வேண்டும். எந்த விதமான உயிர்த் தியாகங்களையும் செய்ய வேண்டும் என்று கார்ல் மாக்ஸ்சோ லெனினோ அல்லது எங்கட புலம்பெயர் பேப்பர் மார்க்ஸிட்டுக்களோ சும்மா மாவோயிஸ்டுக்களோ அல்லது கருணாநிதியாவது சொல்லியதற்கு இணங்க மக்கள் தாங்களாகவே விரும்பி அரச கட்டுப்பாட்டுக்குள் செல்லாது எனது உயிரைக் காப்பாத்த முயற்சி எடுத்தார்கள்.

நடேசனுக்குச் சொன்னன். இடம் பெயர்ந்த மக்களுக்கு என்று ஜ.நா குடுக்கிற எல்லா சாப்பாட்டையும் வாங்கி விழுங்கி ஏப்பம் விடுறதிலை இருக்காம, அவன் கோப்பத்தாயவுக்காவது போனடிச்சு சுடுறதை நிப்பாட்டு என்று கேள் என்றேன். நான் கேட்டதாகச் சொல்ல வேண்ணடாம் என்று கூடச் சொன்னேன். இந்த விசயம் வெளியில் தெரிந்தால் மலை போல நம்பியிருக்கும் தமிழ் மக்கள் துடிச்சுப் போயிடுவினம். தலைவர் பயமில்லாமல் துணிவோடதான் இருக்கிறார் என்று அடிக்கடி அறிக்கையும் விடச்சொன்னன்.

பசில் சொன்னானாம் உங்கட ஆள்தான் முடிவுக்கு கொண்டுவரச் சொன்னவர். விரைவிலை கொண்டுவாறம் என்று. எனக்கு தூக்கிவாரிப் போட்டுது. நாசமறுப்பார் தழிழ் மக்களின்ரை பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரச் சொன்னா என்ரை குடும்பத்துக்கு ஒரு முடிவு கொண்டுவாறாங்கள் என்று. என்ன செய்வது. பொட்டனிடம் கேட்டேன் இதுவரை எத்தினை ஆயிரம் மக்கள் இறந்து விட்டார்கள் என்று. அவன் சொன்னான் கிளிநொச்சி வரை எங்கட படை கிளிச்சுப் போடும் என்று நம்பியிருந்த மக்களிலை ஒரு 1 000 பேர் வரை செத்துப் போச்சினம். தெடர்ந்து நாங்கள் ஒடப் போறம் என்பதால் இன்னும் 25 அல்லது 30 ஆயிரம் பேர்வரை சாகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று. உடனே நான் வேதனையின் விளிம்புக்குச் சென்றேன். நான் மீண்டும் பொட்டனிடம் நிதானமாகக் கேட்டேன். அரச கட்டுப்பாட்டுக்குள் தப்பிச் சென்ற துரோகிகளை விட எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீர மிகு மக்கள் எத்தனை ஆயிரம் தேறும் என்று. பொட்டனின் பதில் கிட்டத் தட்ட மூன்று லட்சம் பேர் எஞ்சியுள்ளார்கள் என்பது.  

அப்போதுதான் லண்டனில் நீங்கள் எல்லாம் மக்கள் வெளியேற விருப்பமில்லாமல்தான் இருக்கிறார்கள். உவள் சீவரத்தினத்தின்ர பெடிச்சிக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறள். கலியாணம் காட்சி ஒன்றும் இல்லாதவள். எங்களுக்காக லண்டனில உரக்க உரக்க குரல் கொடுத்தவள். தனக்கு பிள்ளையல் இருந்தா தன்ரை பிள்ளையலை புலிப்படையில சேர்திருப்பன் என்று லண்டன் பார்லிமென்டிலேயே கதைச்சவள். ஆன அவளின்ர பிரெண்ட் அங்கையற்கண்ணி கடைசி நேரம் காலை வாரிப் போட்டு டக்ளஸ்சோட ஓடிப்போய் ஒட்டிவிட்டால். உவன் நாசமாப் போன டக்ளஸ்க்கு எத்தினைதரம் ரை பண்ணின்னான். அவனுக்கு ஆயுள்கெட்டி. அது போகட்டும்.

சருவதேசமே (தேசம்நெற் என்று நினைக்க வேண்டாம்) மக்களை அங்கே வைத்தே போரை நிறுத்து என்று கத்திக் கூத்தடித்தீர்கள். என் கட்டளையை மீறி சில தளபதிகள் மக்களை அவ்வப்போது திறந்து விட்டார்கள். அந்தத் தளபதிகளை எல்லாம் போட்டு மணலில் தாட்டேன். மீறி தப்பி ஓட நினைத்த மக்களையெல்லாம் மாடுகளைப் போல சுட்டுத் தள்ளச் சொன்னேன். நான் சொல்வது ஏதாவது பொய்யாய் இருக்குமோ என்று சந்தேகம் கொள்பவர்கள் வன்னி முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசிப் பாருங்கள்.

விசயத்துக்கு வருகிறேன். முடிவை மாத்துங்கோடா உங்களுக்கு புண்ணியமா கிடைக்கும் எண்டு எத்தினை தடவை கெஞ்சியிருப்பன். ஆண்ட பரம்பரையின் மிடுக்குடன் ஆயிம் தடவை போன் பண்ணியிருப்பன். கரிகால சோழனைப் போல் பங்கருக்குள் பதுங்கியிருந்து பாத்மநாதனை, போனிலை இந்த யுத்தத்தை நிறுத்து என்று நான் கேட்காத நாள் கிடையாது. அறுவார் கே.பி, ரூட் ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் அமெரிக்கா வருது. ஆபிரிக்கா கொதிக்குது. அண்டாடிக்கா எகிறுது. கெலி; வட்டமடிக்குது. டாக்குத்தர் ஜயா அனுப்பின வணங்கா மண் சுணங்காம வருது என்று உவங்கள் விட்ட கதைகள் ஏராளம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மாக்களே!

ஒரு கட்டத்தில் எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிளிநொச்சியும் போச்சு. நான் போட்டிருந்த ரவுசரும் கிளிஞ்சு போச்சு. அப்பவும் பொட்டன் சொன்னவன். அண்ணை வெளிநாட்டிலை இருக்கிறவங்கள் உங்களை பப்பா மரத்திலை ஏத்திறாங்கள். ஒரு நாளைக்கு பொத்தெண்டு கீழை போடுவாங்கள். அது மட்டுமில்லை. போட்ட கையோட யாழ்ப்பாணத்திலை கோட்டல் கட்டவும் ரோட்டுப் போடவும் மகிந்த மாத்தையாவப் போல ஒரு மனுசன் கிடையாது என்று அறிக்கை விடவும் கோப்பி குடிக்கவும் கும்மாளம் அடிக்கவும் ஓடுவாங்கள் என்று.

உண்ணா விரதம் இருந்த இடைக்காடர் அம்சாவுக்கு இடையாலை சைக்கிளோடுவார், தூள் விநாயகர் செல்வராசா முதலைக் கண்ணீர் வடிப்பார், சிலர் கூட்டத்திற்கு லேற்றா போனாலும் ஜயின்ரைன் தியறி எல்லாம் சொல்லுவாங்கள். அக்காமார் மகிந்த மாத்தையாவை விட்டா உலகத்திலையே வேறை நல்ல ஆள் கிடையாது என்று அறிக்கை விடுவார்கள். சிலர் வன்னி முகாம் எல்லாம் சொர்க்க பூமி மாதிரி கிடக்கு என்று சொல்வார்கள். வெளிநாட்டுப் புலியும் குழுவை அனுப்பும். மகிந்தவைப் பற்றி புகழ்ந்து தள்ளும். திருமாவளவனுக்கு நீங்கள் குடுத்த காசிலையே பொன்னாடை வாங்கிக் கொண்டு போய் மகிந்தவுக்கு போர்ப்பாங்கள் என்று.  நான் யார் சொன்னதைக் கேட்டேன் இவன் சொல்வதைக் கேட்பதற்கு.

இப்ப எனக்குப் புரிகிறது. புளியங்குளம் புடிச்சிட்டான். நெடுங்கேணி நொருக்கிப் போட்டான். மல்லாவிலை புல்லுக் கூட இல்லை. ஒட்டுசுட்டானிலை எல்லாரையும் சுட்டுப் போட்டான். ஆனையிறவு போச்சுது. கிளாலி கிழிஞ்சுது. கல்லாறு அணைக்கட்டுக்கு குண்டு வைச்சு சுனாமி விளையாட்டுக் காட்டுவம் என்டா அதுவும் வாய்க்கேல்ல. கிளிநொச்சி மிஞ்சும் எண்டு பாத்தா அது பழஞ்சீலை போல சறக் எண்டு போச்சுது.

என் அன்பார்ந்த புலத்து மாக்களே!

தோல்வி நிச்சயம் என்று தெரிஞ்சும் ஏன் இந்த நாய் மக்களை விடாம அடைச்சு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் சில வேளைகளில் சிந்தித்திருக்கக் கூடும். சொல்றன் கேளுங்கோ. எனக்கு புலத்தில இருந்து அழைப்புகள் வந்தது. சனம் ஆயிரக்கணக்கில செத்தால்தான் வெள்ளைக்காரணுக்கு இரக்கம் வந்து உவன் மகிந்தவுக்கு ஒரு பாடம் புகட்டுவான்கள் என்றான்கள். எங்கட சனம் செத்து மகிந்தவுக்கு பாடம் படிப்பிக்கிறதோ சனத்தைக் கொல்லாம ஏதும் செய்யேலாதோ என்று நான் திரும்பவும் கேட்டனான். அதுக்கு அவங்கள் நான் பங்கரிலை இருக்கிறதாலை உலக விசயம் தெரியாதாம் என்று சொல்லிப்போட்டு என்னவோ கோதாரியோ கொசோவாவோ என்ற இடத்தில இப்படித்தான் நடந்ததாம் என்று அந்தத் துலைவார் சொன்னாங்கள். அப்பதான்  ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். இன்னும் எத்தினை ஆயிரம் பேர் செத்தாலும் எத்தினையாயிரம் பேரைக் கொன்றாலும் பரவாயில்லை நானும், first ladyயும் குடும்பமும் தப்பும் வரை மக்களை வெளியேற அனுமதிக்க வேண்ணடாம் என்று. உந்த விசயத்தை கேள்விப்பட்ட என்ரை மூத்தவன் வந்தவன் போனவன் குஞ்சு குருமன் என்று பார்க்காம கொசாவோ மாதிரி எங்களுக்கும் தீர்வு வரும் என்று கொன்று குவிச்சம். நாங்கள் கொல்லுறதிலும் பார்க்க மகிந்தவின்ரை படையைக் கொண்டு வந்து கொன்று குவிக்க வைத்தம். அது தான் எங்கட மில்ரி ஸ்ரரர்ஜி. அதை உலகம் எதிர்பார்க்கவில்லை. எங்கட திறமையைக் கண்டு வயந்து போனார்கள். சனம் கூட்டமா இருக்கிற இடங்களில இருந்து எங்கட வீரப்படை கிறைனைட்டை கழட்டி எறியும். உடன மொக்குச் சிங்களவன் அந்த இடத்துக்கு செல்லடிப்பான். சனம் சாகும் நாங்கள் விடியோ பிடித்து அனுப்புவம் நீங்களும் பாத்து மகிழ்ந்திரப்பியல் தானே.

உங்களுக்குத் தெரியும் என்ரை உயிருக்கு ஆபத்தெண்டா படிச்சவன் படிக்காதவன் குஞ்சு குருக்கான் எண்டு பேதம் பாக்காமல் சுட்டுத் தள்ளத் தயங்க மாட்டன் எண்டு. அப்பிடி இருக்கும் போது உங்கட பெஸ்ற் லேடி இருக்கிறாள். என்ரை பிள்ளையள் வேறை பயந்து கொணடிருக்குதுகள். இப்பிடி என்ரை முழுக் குடும்பபே சாவுக்கு பயந்து சயனைட் குப்பிகளை கழற்றி வீசிவிட்டு வீராவேசத்தோடு என்னோடு கதறி அழுது கொண்டிருக்கும் போது மக்களாவது மண்ணாங் கட்டியாவது.

வீட்டுக்கு ஒரு புள்ளை எண்டு ஒரு காலத்திலை புடிச்சது என்னவோ வாஸ்தவம் தான். அதுக்காக கொள்கையை மாத்தக் கூடாதா என்ன. கலியாணம் கட்டக் கூடாது எண்டன் பிறகு மதியுடன் மயங்கிய பின் கலியாணத்துக்கு முன்பே கட்டிலைப் பரிமாறியபின் கொள்கையாவது மசிராவது என்று மாற்றிக் கொண்டேன். அரசுடன் சேந்தா துரோகி என்றேன் பின் நானே பிறேமதாசவுடன், மகிந்தவுடன் கூட்டு வைத்தேன். கோடி கோடியா பணம் புரட்டினேன். கொள்கை எண்டா என்ன? எனக்கு சரி எண்டா சரி யாகவும், பிழையெண்டா பிழையாகவும் எடுத்துக் கொள்வதுதானே. அதைப் புரிந்து கொள்ளாமல் வன்னி மக்கள் சேட்டை விட்டினம். நாங்கள் ஒழிச்சு வந்து இருக்கேக்குள்ளை சாப்பாடு தந்தவதான். பாதுகாத்தவை தான். அதுக்காக என்ரை குடும்பம் அழியும் போது வன்னியாற்ரை புள்ளையள் வாழுறது எந்த புத்தகத்திலை எழுதியிருக்கு சொல்லுங்கோ பாப்பம். வன்னியாக்களுக்குத் தெரியவேணும் நாங்கள் முஸ்லிம் மக்களைத் துரத்தும் போது என்ன செய்தனாங்கள் என்று. காதிலை கையிலை கிடந்த நகைகளையெல்லாம் எப்பிடிப் புடுங்கினோம் என்று.

யாழ்ப்பாணத்திலை இருந்து இடம் பெயரும் போது யாழ்ப்பாண மக்களுக்கு என்ன செய்தனாங்கள். மக்கள் எல்லாம் புலிகளோடுதான் என்று காட்டுவதற்காக மாடுகளை விடக் கேவலமா சாய்ச்சுக் கொண்டு வந்தனாங்கள். மூதூரிலை மட்டும் என்ன குறைவே. இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் நாங்கள் மனிதாபிமானமாய் நடக்கேல்லை எண்டா உதென்ன விளையாட்டு. உவங்கள் கொஞ்சப்பேர் சொல்லுவாங்கள் ஜரோப்பாவிலை அதென்னது? ஆ… பின்னவீனத்துவ விளையாட்டோ?

Piraba_in_Swimmingpoolநான்தான் சொன்னேன். வரமறுக்கிற பிள்ளைகள் எல்லாரையும் அந்த இடத்திலை சுடுங்கள். தடுப்பவர்கள் யாரும் வந்தால் வாகனத்தை விட்டு ஏத்துங்கள் என்று. பச்ச மட்டை வெட்டி பாடம் புகட்டுங்கள் என்று. அன்னம்மாவும் பொன்னமாவும் கந்தப்பனும் ஏரம்பனும் பிள்ளையை இழந்தா எனக்கென்ன. எனக்கு மதி டாலிங் உயிரோடு இருக்கவேணும். பாலச்ந்திரன் நீந்த நீச்சல் குளம் வேணும். அதனால் தான் தழிழீழ வரலாற்றில் போராட்டம் இக்கட்டான சூழலிலில் இருக்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தேன். அதுதான் எத்தினை ஆயிரம் வன்னி மக்களும் மாடுகளும் செத்தாலும் பரவாயில்லை. அமெரிக்காவின் கப்பல் வந்து என் குடும்பத்தை ஏத்தும் வரைக்கும் நோ எஸ்கேப் என்று.

இந்த இடத்தில் சில வெளிவராத வரலாற்று உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சும்மா சைக்கிளிலை போன என்னைக் கூப்பிட்டு துவக்கைத் தந்து துரையப்பாவைச் சுடச்சொல்லிப்போட்டு உவன் அமிர்தலிங்கம் பிறகு எனக்கு அரசியல் தெரியாது எண்டு சொன்னான். அதற்காகவே அவனைப் போட்டுத் தள்ள முடிவு செய்தேன். அது மட்டுமல்ல பக்கத்தில் படுத்திருந்த போது பாயில் வைத்துச் சுட்ட மைக்கல்,  களத்தில் விட்டுச் சுட்ட செல்லக்கிளி,  காட்டிக்குடுத்து கொன்ற குட்டிமணி, தங்கத்துரை, சுந்தரம், விக்ரர், இந்திய ராணுவத்துடன் பேச அனுப்பிய ஜொனி, எவ்வளவு பனைகள் முறியாமல் இருக்க முறிஞ்ச பனைகளைப் பற்றிப் புத்தகம் போட்ட ராஜினி,  கருணாநிதிக்கே ஆப்பு வைச்சுப் போட்டுச் சுட்ட பத்மநாபா, என்னைப் பற்றி கவிதை எழுதாமல் பெண்ணியம் கத்தரிக்காய் என்று எழுதிய செல்வி,  என்று நான் நேரடியாக போட்டது. என் உத்தரவில் போட்டது. உத்தரவு வந்திருக்கிறது என்று நினைத்து போட்டது என்று தழிழ் ஈழப் போராட்டத்தில் நான் சுட்ட பட்டியல் இந்த மாவீரர் உரையில் போட நினைத்தால் அது 1000 பக்கங்களை தாண்டிவிடும். சொந்தப் போராளிகளையே போட்டுத் தள்ளியிருக்கிறேன். மாற்றுக் கருத்தாளர்கள் எம்மாத்திரம். 

Hunger_Strikeஇந்த வகையில் லண்டன் தம்பி பரமேஸ்வரனுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தம்பி நீ எனக்காக விழுங்கு விரதம் இருந்தாய். நான் இங்கு மூன்று வேளை உண்டு உற்சாகமாய் இருந்தபோது நீ அங்கே ஒரு வேளை மட்டுமே விழுங்கி இருந்தாய். அதற்காக நான் பெருமைப் படுகிறேன். KFC கோழிக் கடையில் நீ சாப்பாடு வாங்காது McDonald இல் மட்டுமே சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டாய் என்ற ஆத்திரத்தில் கே.எவ்.சி கிளப்பிய புரளியைக் கண்டு நீ ஒன்றும் ஆடிவிடாதே. புலத்து அறளை பேந்ததுகளுக்கு நீ வழக்கு போடுவதாய் சொல்லியே காலத்தைக் கடத்து. வணங்கா மண் போகுது. வருகுது. இறக்குது ஏத்துது எண்டு மூத்தி அண்ணை விட்ட புலுடா வையே நம்பின மக்களுக்கு இது ஒன்றும் பெரிதாக இருக்காது.

என் அன்பார்ந்த புலம் பெயர்ந்த மாக்களே!
 
சருவதேசத்திற்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாலா அண்ணா அடிக்கடி சொல்லுவார். அமெரிக்கன் தனக்குத் தேவை எண்டா காலையும் பிடிப்பான் தேவை முடிஞ்ச கையோடை ஆளைப் போட்டும் தள்ளிப் போடுவான் எண்டு. எனக்குத் தெரியும் பாலா அண்ணைக்கு உந்த உள்ளநாட்டு உளவுஸ்தாபனங்கள் எல்லத்தோடையும் தொடர்பு இருக்கெண்டு.  என்னுடைய விசயத்திலையும் இதுதான் நடக்கும் எண்டு முன்கூட்டியே பாலா அண்ணை சொன்னவர். நான் சொன்னன் அமெரிக்கன்ரை காலிலை போய் என்னை விழச் சொல்லிறியா என்று. அதற்கு அந்த தேசத்தின் குதம் மன்னிக்கவும் குரல் (அதென்ன கீழே இருந்து வந்தா என்ன மேலை இருந்து வந்தா என்ன அந்தாளிட்டை இருந்து வாறது ஒண்டுதானை) சொன்னான் நீ எம்.ஜி.ஆரின் காலிலேயே விழுந்தனி. அமெரிக்கா எந்தப் பெரிய நாடு. அமெரிக்கான்ரை காலிலை விழுந்தா சர்வதேச அரசியலும் உனக்குத் தெரியும் என்று புலம் பெயர் சனம் பாராட்டும். அதனால தான் நான் அமெரிக்கா என்ன சொன்னாலும் செய்வதென்ற முடிவு செய்தேன். 

அமெரிக்காவே! இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கிழிக்கச் சொன்னாய். கிழித்தேன். இந்திய ஆமியுடன் அடிபடு எண்டாய். அடிபட்டடேன். ராஜீவ் காந்தியை கொல் என்றாய். கொன்றேன். நீ கேட்டு நான் எதைச் செய்யாமல் விட்டேன். நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்தாய் தமிழீழம் எடுத்துத்  தருவதாய். உன்னை நம்பித்தானே கடைசிக்காசு அந்தக் காசு இந்தக்காசு என்று புலத்து மக்களிடன் வசூலிச்சேன். அதிலே தங்களுக்கு எண்டு எடுத்த காசு போக மீதி எல்லாம் உன் நாட்டு ஆயுதக் கொம்பனிகளுக்குத் தானே கொடுத்தேன். கப்பல் அனுப்பிறன் கப்பல் அனுப்பிறன் என்று கடசிலை மகிந்த மாத்ததையாவிட்டை கெஞ்ச விட்டிட்டாயே அமெரிக்கா. நீ நாசமா போக. நீ அழிஞ்சு சின்னா பின்னமாக. என் அம்மணச் சாபம் சும்மா விடாது.

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே

இந்த நாளில் நான் உங்களுக்கு ஒரு பெரிய ஆலோசனை வழங்க உள்ளேன். எதிர்காலத்தில் நான் கொண்டது போக தமிழ் மக்கள் ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால்இ மகிந்த அவர்களைப் போட்டுத் தள்ளாமல் இருந்தால் அவர்களுக்காக போராட நினைக்கும் எல்லோருக்கும் எனது புத்திமதி இதுதான். தனித் தமிழீழம் உருவாக வேண்டுமானால் நீங்கள் செய்யவேண்டியது ஒரு சின்ன வேலை தான். தயவு செய்து பிளேன் வாங்க வேண்டாம். வாங்கி விளையாட்டுக் காட்ட நினைச்சு நான் பட்ட பாடு உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்படியானால் என்ன செய்தால் புரட்சி வெல்லும் என்று நினைக்கிறீர்கள்? மிகச் சுலபம். நான் என்ன என்னவெல்லாம் இந்த 35 வருடங்களாக செய்தேனோ அதை தயவு செய்து செய்வதற்கு கனவிலைகூட நினைக்காதையுங்கோ. அதாவது படுக்கiயிலை வைச்சுச் சுடுறது. படிச்சவனை சுடுறது. மாற்றுக் கருத்தாளர்களைப் போடுறது. உளவுப் படை கட்டிறது. கட்டின கையோடை சயனைட்டைக் குடுத்து சாவெண்டு சொல்லிறது. முக்கியமா மருந்தடிக்கிற பிளேனை வாங்கி பொசுக்கெண்டு குண்டு போடுறது. போட்ட கையோடை போட்டோ எடுத்து தமிழ்நெற்றிலை போடுறது போன்ற எந்த எழிய காரியங்களையும் செய்திடாதையுங்கோ. இன்னொரு செய்தி கடைசிவரைக்கும் புலம் பெயர்ந்த மகக்ளிட்டையும் குறிப்பா சீமான் மாதிரி இந்திய கூத்தாடிகளிட்டையும் அட்வைஸ் கேட்டு ஒரு முடிவும் எடுக்காதையுங்கோ. பிறகு முடிவு என்னவாய் இருக்கும் எண்டு தெரியும்தானை.   முக்கியமா என்படத்தை கட்டவுட் செய்து தமிழீழம் எங்கும் கட்டி வைப்பது மட்டுமல்லாமல் கீழே ஒரு வாசகத்தiயும் போட்டு வையுங்கள். “இவனைப்போல யாராவது இயக்கம் கட்ட நினைத்தால் உடனே அடித்துக் கொல்லுங்கள” என்று. “35 வருடங்கள் தயவு செய்து காத்திருக்க வேண்டாம்” என்று.   

டேய் மகிந்தா! நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீ என்னைப் பிடிப்பாய் என்று எனக்குத் தெரியும். புடிச்சால் உடுப்பு உரிவாய் என்றும் எனக்குத் தெரியும். உரிஞ்சா போட்டோ எடுப்பாய் எண்டும் எனக்குத் தெரியும். எடுத்தா யூ ரியூப்பிலை போடுவாய் எண்டும் எனக்குத் தெரியும். ஆனால் புலம் பெயர் மக்களும் சீமானும் விசுக்கோத்தும் மன்னிக்கவும் வைகோவும் நான் ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்த நெடுமாறனும் இது வெறும் கொம்பியூட்டர் விளையாட்டு எண்டு சொல்லி நம்ப மாட்டாங்கள். உனக்கு தகவல் தந்து கொண்டிருக்கும் பத்மநாதனை ஒருநாள் நீ இலங்கைக்கு கொண்டுவருவாய். கருணாவைக் கொண்டுவந்து என்ரை பிணத்தைக் காட்டுவாய். கண்ணாடி மறைவில் நின்று மகிந்தா நீ என்னை அம்மணமாக இருப்பதைப் பார்ப்பாய். ஆனால் பிரபாகரனைப் பிடித்தால் அந்த இடத்திலை நூறு வருசத்துக்கு புல்லு முளைக்காது எண்டு புலம் பெயர் மக்கள் நம்பிக் கொண்டே இருப்பார்கள். நான் வருவன் வருவன் எண்டு எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

என் மகன் சாள்சை தலைவராக்க முயற்சிகள் எடுத்த போது உவன் பானு தலையிடப்பாத்தான். போட்டுத் தள்ளினேன். மணலுக்குள் புதைத்து வைத்திருந்த பிணத்தை எடுத்து மகிந்த அரசு கொக்கரிக்கிறது ஏதோ தாங்கள் தான் பானுவை போட்டோம் என்று.

டேய் மகிந்தா! நீ என்னை சுட்டோ அல்லது கோடரியால் கொத்தியோ கொல்வாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் என்றோ ஒருநாள் நீ யமலோகம் வரத்தான் போகிறாய். அங்கே ஒரு இயக்கம் கட்டி. அங்கும் ஒரு பொட்டனையும் கூட்டி. உனக்கு நான் வேட்டு வைக்கேல்லை. ‘வே’யன்னா ‘பி’னா இல்லை.

உவன் மகிந்த பரவாயில்லை எதிரி. ஆனா உங்க வெளிநாடுகளில இருக்கிற நெடியவன் கொடியவன், ரூட் ரவி, ஊத்தை ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் எல்லாம் துரோகிகள். என்னை வைச்சுப் பிழைக்கிற பிளான் போட்டுட்டான்கள். வெளிநாட்டுக்கு வந்து வேலை வெட்டிக்குப் போகாம சனத்தின்ர காசிலை ஏப்பம் விடுற இந்த கோஸ்டி ஒரு நாளைக்கு மேல வருவினம் தானே. அவைக்கு அப்ப ஊதுறன் சங்கு.

இந்த உரையை எல்லாருக்கும் விளங்கிற மாதிரித்தான் எழுதி இருக்கிறம். இதவும் விளங்காட் எங்கட கவிப் பேராசிரியர் சேரன் இப்ப சும்மா தான் இருக்கிறார். அவரைக் கொண்டு பொழிப்பெழுதச் சொல்லுங்கோ. அது நல்லா வந்த யப்னா கம்பஸ்ஸில உவன் டக்ளஸ் பிடிச்சு ஒரு வேலை வாங்கிக் குடுப்பம். அதுசரிவராட்டி உவன் பிள்ளையானுக்கு கொஞ்ச னெண்டாலும் விசுவாசம் இருக்கும் அவனைப் பிடிச்சு ஈஸ்ற் கம்பஸ்ஸில வேலை எடுத்துக் குடுக்கலாம்.

புலிகளின் தாகம் ஒரு ரம்ளர் நல்ல குடிதண்ணி.
(ஏனென்றால் புதுமாத்தளன் தண்ணி சரியா உப்புக் கசக்குது.)

வே பிரபாகரன்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
மேல்லோகம்

._._._._._.

 பின் குறிப்பு:

ஒருவரின் மரணத்தில் ஆனந்தம் கொள்வது மிக மிக அபத்தமானது. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் காவு கொண்ட லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு கொடுத்த விளக்கம் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்கான இறுதித் தீர்வுக்கான போராட்டம் என்பதாகும். இன்று மரியாதை இழந்து சுய கௌரவம் போய் மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்களது வாழ்வும் அடிப்படைப் பிரச்சனையும் 83ம் ஆண்டு இருந்ததை விட பன்மடங்கு கூடியே இருக்கிறது. தமிழ்பேசும் மக்களின் விடிவுக்காக போராட்டம் பற்றிச் சிந்திக்கும் யாரும் பிரபாகரனை அருவருப்போடு நினைவு கொள்வது மீண்டும் தமிழ்பேசும் மக்கள் ஒரு புதுமாத்தளனை சந்திக்காமல் இருப்பதற்காகவே இந்த ஆக்கம் தரப்பட்டுள்ளது. பிரபாகரனும் அவருடன் கொலை புரிந்த தளபதிகளும் பிரபாகரன் போலவே சொந்தப் போராளிகளை கொன்று குவித்த உமா மகேஸ்வரன் போன்ற தலைவர்களையும்  தவிர்த்து தழிழீழ போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து சிங்கள- தமிழ் -முஸ்லிம் மக்களுக்கும் போராளிகளுக்கும்  என் இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.

Show More
Leave a Reply to jalpani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • chilli
    chilli

    தமிழ் மக்கள் படிக்க வேண்டிய பாடம். இனியும் படிக்கவில்லையென்றால் ……..

    Reply
  • Vinothan
    Vinothan

    இது போன்ற ஒரு இழிவான ஆக்கத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கொக்கரிக்கும் கூட்டத்திற்கு தலைவர் பதிலடி கொடுக்கும் காலம் து}ரமில்லை.

    Reply
  • Poorni
    Poorni

    தேசம்நெற் கட்டுரைகளையும் வாசகர்களின் கருத்துகளையும் வடிகட்டி பிரசுரிப்பதன் முலமே ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்க முடியும். கேலித்தனமான அல்லது நக்கலான எழுத்துக்கள் வாசகர்களின் கருத்துக்களை பிரசுரிபத்தின் முலம் நல்ல வாசகர்களை இழக்க நேரிடுவதுடன் நல்ல கருத்துக்களை கூறும் பொழுது கூட வாசகர்கள் ஏற்க மறுத்து விடுவார்கள்.

    Reply
  • Kalai
    Kalai

    நக்கலா எழுதினாலும் நம்மளுக்கு புரியிறமாதிரி நல்ல விசயம் நிறைய உண்டு.– வாழ்த்துக்கள் ஈழமாறனுக்கு தொடர்ந்து எழுதி துயில் எழுப்பவும்.-

    Reply
  • chilli
    chilli

    பூர்ணி நீங்களும் பின் நவீனத்துவ வாதியோ? ஒன்றும் விளங்கேல்லை

    Reply
  • thurai
    thurai

    //புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கொக்கரிக்கும் கூட்டத்திற்கு தலைவர் பதிலடி கொடுக்கும் காலம் து}ரமில்லை.//

    ஈழத்தமிழர் பெயரால் பிழைப்பு நடத்தும் புலிகளிற்கு தலைவர் இருந்தாலும் பணம், இறந்தாலும் பணம். புலத்துத் தமிழரை மந்தைகளாக்கியவர்களே புலிகள். இவர்களின் விடுதலைப்பேச்சு வீண் பேச்சேயாகும்.

    துரை

    Reply
  • பேஸ்புக்
    பேஸ்புக்

    (பேஸ்புக்ல் வெளிவந்த கருத்து)

    தேசியத்தின் பெயரில் உண்மையாக போராடிய மரணித்த போராளிகளுக்கு…..

    இந்த மாவீரர் தினத்தை தங்களின் சொந்த வியாபாரத்துக்கான மையமாக கருதும் கூட்டம், அதை நோக்கி திட்டமிடுகின்றது. இப்படி அஞ்சலிக் கூட்டம் வியாபாரமாக மாறி நிற்கின்றது.

    பிரபாகரன் கொல்லப்பட்ட விதம், அதன் பின் உள்ள போர்க்குற்றங்கள் பற்றி இந்த கூட்டத்துக்கு எந்த அக்கறையும் கிடையாது. இது எப்படி, எந்த நிலையில் நிகழ்ந்தது என்பது தொடர்பான முழு விபரங்களையும் மூடிமறைத்து, தங்கள் துரோகங்களையும் குற்றங்களையும் இதனூடு மூடிமறைக்கவே முனைகின்றனர்.

    மாறாக பிரபாகரனை வீரனாக, கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒருவனாக, தேசியத்தின் அடையாளமாக, தங்கள் போலியான அஞ்சலிகள் மூலம் கட்டமைத்து காட்ட முனைகின்றனர். ஒரு விம்பத்தை உருவாக்கி, தங்கள் பிழைப்பை நடத்த முனைகின்றனர். பினாமிச் சொத்துக்கு தமக்குள் மோதும் இந்தக் கும்பல், அந்த நிதியை தமிழருக்கான ஒரு பொது நிதியமாக்க முனைவதில்லை. பிரபாகரனை வழிபாட்டுக்குரிய ஒருவராக்கி, அதன் மூலம் சொத்துப் பிரச்சனையை தீர்க்கவே முனைகின்றனர். … See More

    பிரபாகரனோ உண்மையில் போராடி மடியாது சரணாகதி அடைந்து, ஒரு கோழையாகவே மரணித்தவன். கொள்கையை கைவிட்டு, தன் உயிரைக் காப்பாற்ற முனைந்து கேவலமாக மடிந்தவன். தேசியத்தின் அனைத்துவிதமான சமூக கூறுகளையும் நிராகரித்து, தன் சொந்த வாழ்வுக்கு ஏற்ப போராட்டத்தை பாசிசமாக்கியவன். தான் அல்லாத, தன்னுடன் நிற்காத அனைவரையும் 30 வருடத்தில் தொடர்ச்சியாக படுகொலை செய்து வந்தவன். இறுதி நேரத்தில் தன்னை பாதுகாக்க மக்களை பலிக்கடாவாக்கியதுடன், இந்தப் பலிக்கு உடன்பட மறுத்த மக்களை தன் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியிட்டவன்.

    பிரபாகரன் மரணத்தை மறுத்து முரண்படும் கும்பல், இதற்குள் சொத்தை தக்க வைக்க முனைகின்றது. பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் செய்த தமிழ்நாட்டு அரசியல் பிழைப்புவாதிகள்இ பிரபாகரனின் இந்த செயலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதை மறுத்தும், அவர் இருப்பதாக கூறியும் அரசியல் பிழைப்பை தொடர்ந்து நடத்த முனைகின்றது. இவை அனைத்தும் மக்களுக்கு பிரபகாரன் செய்ததை, சொல்லாமல் இருக்க முனைகின்றது.

    அவர் கோழையாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சரணடைந்ததையும், புலிக் கொள்கைகளைக் கூட கைவிட்டதையும், மூடிமறைக்க முனைகின்றனர். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டதையும், இதற்கு உடன்படாதவர்களை பலியெடுத்ததையும் மறுக்க முனைகின்றனர்.

    இதற்கு தலைமை தாங்கிய கொலைகாரன் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி, அவனால் கொல்லப்பட்ட மக்களுக்கு பட்டை நாமம் போட முனைகின்றனர். தேசியத்தின் பெயரில் உண்மையாக போராடிய மரணித்த போராளிகளுக்கு, இதன் மூலம் சேறடிக்க முனைகின்றனர். பிரபாகரனுக்கு அஞ்சலியா அல்லது அவன் தலைமையில் கொல்லப்பட்ட மக்களுக்கும் உண்மையான போராளிகளுக்கும் அஞ்சலியா என்பதே, மக்கள் பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள் முன் எழ வேண்டிய கேள்வியாக இன்று உள்ளது.

    Reply
  • hazan
    hazan

    / புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கொக்கரிக்கும் கூட்டத்திற்கு தலைவர் பதிலடி கொடுக்கும் காலம் துரமில்லை//

    வெட்கமா இல்லையா இன்னும் தலைவர் இரக்கிறார் எண்டு சொல்ல. பூர்ணி பலர் எழுதாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். பிரபாகரன் செய்த கொலைகளை விடவா, இதில் என்ன பிழையாகவா ஈழமாறன் எழுதியுள்ளார் உங்கட பின் நவீனத்துவ கலவிகளை எந்த மக்கள் ஏற்ப்பார்கள்

    Reply
  • அறிவழகன்
    அறிவழகன்

    எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ பேய்களோடு ஓடிக்கொண்டிரு. உன்னால் முடியும் உன்னால் முடியும் தலைவா. அழகிய தமிழ் மகனே

    Reply
  • accu
    accu

    கனடாவுக்கு மாவீரர்தின நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்ற வந்த சீமான் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிகக் கேவலமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த மூன்றாம் தரமான உரையை வானொலியில் கேட்க நேர்ந்தது. அப்போ நினைத்தேன் இப்படியானவர்களை எப்படி கனடா போன்ற நாடுகள் உள்ளே வரவிட்டார்களென்று. ஆனால் இன்று அவர் கனடாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    தர்மதின் வாழ்வுதனை சூது கொள்ளும் – ஆனால்
    தர்மம் மறுபடியும், மறுபடியும் வெல்லும்.

    – பகவத்கீதை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அடிமட்டத்தவர்களுக்கு சயினட். உயர்மட்டதவர்களுக்கு வெள்ளைக் கொடி. புலிப்போராட்டத்தின் ஒட்டுமொத்த விடையும் இதில் தான் தங்கியுள்ளது. இல்லையா?.

    Reply
  • warren
    warren

    போராளிகளிற்கு தலை சாய்ப்போம் துரோகிகளை இனம் காண்போம்
    புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர் மேலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் தலைமை உயிரோடு உள்ளதாகவே இன்னமும் வீணான கற்பனையில் உள்ளனர் மக்கள் விழித்துக் கொள்ளும் முன் இன்றய நிலையை தமக்கு சாதகமாக்கி பணம் கறப்பதற்கு தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகளின் கூட்டுடன் புறப்படடுள்ளனர்

    இந்த தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகள் எப்படி எமது 40 ஆண்டு கால போரட்டத்தினை தமது நலன்களிற்கு பயன்படுத்தினார்கள் என நீண்ட பட்டியலே வெளியிடலாம் இறுதியாக எமது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஓலமிட்ட போது இந்த கழிசடை அரசியல்வாதிகள் தமது பாரளுமன்ற நாற்காலிக்காக எந்த இந்திய மத்திய அரசின் முழு ஆதரவுடன் எம் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்டதோ அவர்களுடன் கைகோர்த்து கொஞ்சி குலாவியதுடன் எமது பிரச்சினை குறித்து வாய் ழூடி இருப்பதற்காக பெட்டி பெட்டியாக பணமும் கைமாறிக் கொண்டவர்கள் தான் இவர்கள்.

    மேலும் இந்த கழிசடை அரசியல்வாதிகளான வைகோ ராமதாஸ் திருமாவளவன் போன்றோர் தமிழ் நாட்டிலுள்ள புரட்சிகர அமைப்புகளினால் இந்திய மத்திய அரசினை அம்பலப்படுத்தி எமக்கு ஆதரவாக போராடிய போது அதனை மழுங்கடிக்கும் வேலையையே முனைப்பாக செய்தனர் தோழர் முத்துகுமாரின் மரண ஊர்வலம் ஒரு நல்ல உதாரணமாகும்

    புலம்பெயர் தேசங்களில் உள்ள புலி உறுப்பினர்கள் பினாமிகள் இவர்களின் பின்னால் திரை மறைவில் இயங்கும் முதலாளித்துவ சிந்தனை கொண்ட புத்திஜீவிகள் தான் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டு சேர்ந்து புலிகளின் தலைமையை நயவஞ்கமாக முள்ளிவாய்க்கால் வரை கூட்டி வந்து கொலை செய்தனர்

    இப்படியானவர்களின் மாவீரர் தினக் கூட்டமென்பது மாவீரர்களின் குடும்பத்தினர் உறவினர் மற்றும் தமிழ் மக்களை முட்டாள்களாக்கி மொட்டை அடிக்கும் நிகழ்வாகும்

    இது வரை காலமும் நடந்த கொடிய யுத்தத்தில் களத்தில் போராடியவர்களுக்கும் மாற்று இயக்க அழித்தொழிப்பில் மற்றும் உட்கட்சி படு கொலைகளில் இறந்து போனவர்களுக்கும் மேலும் பல்லாயிரக்கணக்கில் அநியாயமாக உயிர்களை இழந்து போய்விட்ட சாதாரண தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கான உண்மையான மரியாதை செலுத்துதல் என்பது

    முதலில் கடைசி ழூன்று தினங்களில் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த ஏகாதிபத்தியங்களின் கூட்டு சதியை அம்பலப்படுத்தி அதற்கு துணை நின்ற புலத்து புலிகளை மக்களுக்கு இனம் காட்டப்பட வேண்டும்

    இரண்டாவதாக மக்களினால் விடுதலைக்காக கடந்த காலங்களில் வாரி வழங்கப்பட்ட பல கோடிக்கணக்கான நிதி புலம்பெயர் தேசங்களில் புலிப் பினாமிகளால் தனி நபர் சொத்துக்களாகவும் வியாபார ழூலதனங்களாகவும் மற்றும் பணமாகவும் முடக்கப்பட்டுள்ளது. இவற்றினை பொது நிதியமாக்கி போரினால் சகலத்தினையும் இழந்து போயுள்ள பொது மக்களுக்கும் மற்றும் அங்கவீனராகிப போயுள்ள போராளிகளிற்கும் வழங்கப்பட வேண்டும்

    ழூன்றாவது கடந்த பல சகாப்தங்களாக எம்மை சுற்றி படர்ந்திருக்கும் தரகு முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ அரசியலையும் அதன் வழி வந்த விடுதலை புலிகளையும் பரந்து பட்ட மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்

    Reply
  • aat
    aat

    நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள். ஆனால் எவ்வளவு எழுதினாலும் ஏமாளிகள் ஏமாறத்தான் போகிறார்கள். ஆனால் ஓன்று மட்டும் இறந்த அப்பாவி மனிதருக்காய் கேட்கிறன், தயவு செய்து மாவீரர் தினம் என்ற பெயரை மாத்துங்கள். மட்டின் றோல்ல்ஸ் தினம் என்று மாத்துங்கள். உங்கள் ENJOYMENT இக்கு போய் கொண்டு மாவீரர் தினமோ? உங்கட குத்து பாட்டுக்கும் கொத்து ரொட்டிக்கும் கும்மாளத்துக்கும் இறந்தவர் நாளை பாவிக்காதிங்கோ! அங்க இறந்த மாவீரர் குடும்பம் கஷ்டத்தில இர்ருக்கு. நீங்கள் இங்க சைக்கிள் கப்பில காசு லட்ச கணக்கா உழைக்கப் பார்கிறிங்க. மந்தை கூட்டம் போல மக்கள் வந்து போலித்தனமா வணக்கம் சொல்லறன் பேர்வழி என்று POP CONCERT இக்கு வெள்ளைகாரர் போற மாதிரி. இப்ப காசுகளை ஒழுங்கா குடுங்கோ. அப்பத்தான் SUMMER லும் மாவீரர் தினம் PART 2 பார்க்ல வைப்பினம். நல்லா என்ஜாய் பண்ணலாம். யாரவது நாட்டில பிரச்சனையை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா ப்ளீஸ்!!! மாவீரர் தினத்தில உழைத்தால்தான் உண்டு. கொழும்பில சொகுசு வீடு, லண்டனில கடை திறக்கவேண்டும். எல்லோரும் வாங்க என்ன!!

    Reply
  • nathan
    nathan

    என்ன தலைவரின் உரை வெளிவநது விட்டது. ஆனால் பாலா அண்ணரோ அல்லது கவிஞரோ இன்னமும் விளக்க உரை கொடுக்கவில்லை.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ஈழமாறன் சரியில்லை, தற்போதைய தோல்விக்கு காரணமான, இலங்கைத் தமிழரது “மெயின் ஸ்ட்ரீம் சிந்தனை” மாறியதாக தெரியவில்லை. பிரபாகரனும், அவருடைய சில கூட்டாளிகளும், இன்னும் உயிருடந்தான் இருக்கிறார்கள். அப்படி இல்லையென்றால், இலங்கைத் தமிழர்கள் படு மூடர்கள் என்று அர்த்தம். இலங்கைத்தமிழர் அபிலாஷைகளின் பரிணாம வளர்ச்சியே “வே.பிரபாகரன்”. ஈழமாறன் எதற்கு ஆசைப்பட்டு எழுதுகிறாரோ, அதைதான் பிரபாகரன் செய்தார், அதனால்தான் தோல்வி – சமூகம் தோற்றிருக்கிறது. தோல்விக்கு அந்த ஆள்மீது பழிபோடுவது ஒரு “எஸ்கேப்பிஸமே”!. “சந்தனக் கடத்தல் வீரப்பன்” ஒளிந்திருந்த காடுகளும் கடற்கரைவரை நீண்டிருந்தால், ஒரு சாதாரண படகு சொந்தமாயிருந்தால்கூட, “தப்பிப்பதை” அமெரிக்காவாலும், இந்தியவாலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்த உண்மையை மறைத்து, “காக்காய்(வன்னியன்) வடை கதை” கூறும் புலன்பெயர்ந்த இலங்கைத்தமிழ் ஊடகங்கள், பேசாமல் எல்லாவற்றையும் மூடிவிட்டு, வேறு எங்கேயாவது இன்னும் மலிவாக பாஸ்மதி அரிசி கிடைக்கிறதா என்று தேடுவது நல்லது. இந்திய அடையாளம் என்பதை தேடுவதில் நாங்கள் உறுதியாகவே உள்ளோம்!..ஜெய் ஹிந்த்!!.

    சோனியா காந்தி, “ரா”, மேனன்கள், “ரணில்” ,த.தே.கூ., சரத் பொன்சேகா, போன்றோர்களின் சிந்தனை ஒரே வகையானதே. மகிந்த ராஜபக்சேவையும், கருணாவையும் தூக்குவது, “இனப்பிரச்சனைக்கு தீர்வு அல்ல”!. தெரவாடா புத்தமதமே என் முதல் எதிரி! என்று 2007 ஆண்டு மாவீரர்தின உரையில், பிரபாகரன், “பாலசிங்கம் எழுதிக் கொடுத்த புலன்பெயர் இலங்கைத் தமிழரின் அரைவேக்காட்டை” முட்டாள்தனமாக வாசித்தபோதே அவர் வருங்காலம் புரிந்துவிட்டது. மீண்டும் அத்தகைய சிந்தனைக்கு தலைமை தாங்க முற்ப்பட்டால்,…. நானே…! சிங்களவர்களுடன் இனி இணங்கவே முடியாது என்பது இந்திய?, புலன்பெயர் இலங்கைத்தமிழ் சிந்தனை, “ரணில்” இதற்கு இணக்கமான ஒரு தாடகத்தில் நீந்தி, “ஜே.ஆர்.ஜெயவர்த்தனையின்” விளையாட்டைக் காட்டி, சோனியா காந்தி குடும்பத்தின் அரசியல் அரிவற்ற தன்மையை உலகிற்கு மீண்டும் படம்பிடித்துக் காட்ட முற்படுகிறார். ஜே.வி.பி.யும், சிங்கள இராணுவமும், தமிழர்களுக்கு குறைவில்லாமல்தான் உயிர்த் தியாகம் செய்திருக்கிறது. பிரேமதாசாவின் “பச்சைப் படைகள்”, கொன்ற சிங்கள இளஞர்கள், யுவதிகள், வன்னிப் படுகொலையுடன் பலர் ஒப்பிட தவறியுள்ளனர். “தமிழகத் தமிழர்கள்”, சிங்களவர்களுக்கு நட்புக் கரம் நீட்ட விரும்பவில்லை, அவைகள் கேலியாக தட்டிவிடப்படும் என்று தெரியும், ஆனால் அதற்காக, காலம் காலமாக காத்துவரும் சிந்தனையை விடத் தேவையில்லை!. மேற்குலகின் ஈரமற்ற ஆயுதத் தொழிற்சாலைகளை விட சிங்களவர்களின் ஈர இதயத்தைநோக்கி நகருவது சிறந்ததே!.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்பாடி ஒரு வழியாய் தலைவரின் “உரை” வெளிவந்து, நான் அதை பாலுக்குள் விட்டு தயிராக்கி, அதிலிருந்து மோரும் குடித்து விட்டேன். என்ன மோருக்கு கொஞ்சம் பச்சை மிளகாயும், வெங்காயமும் சேர்த்ததால் காரசாரமாகவே இருந்தது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாவீரர் தினத்தில் புலிகளால் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தேனிசை செல்லப்பாவால் பாடப்பட்ட பாடலுடன் ஒரு ஒளிப்பதிவு Youtube இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு:

    http://www.youtube.com/watch?v=fKbd3E7jYRQ&feature=player_embedded#

    Reply
  • தினமணி
    தினமணி

    மாவீரர்களின் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்: ருத்திரகுமாரன்

    தமிழ் ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான செயற்குழுத் தலைவர் ருத்திரகுமாரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ”மாவீரர்களின் தியாகமும், வீரமும் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும். நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வரும் புத்தாண்டில் உருவாக்கி, அதன் வழியே எங்கள் மாவீரர்களின் லட்சியங்களை நிறைவேற்ற, அவர்களது கனவுகளை நனவாக்க அனைவரும் உழைப்போம் என இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.” என்று ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

    Reply
  • jalpani
    jalpani

    ஆனால் அதற்காக, காலம் காலமாக காத்துவரும் சிந்தனையை விடத் தேவையில்லை!. மேற்குலகின் ஈரமற்ற ஆயுதத் தொழிற்சாலைகளை விட சிங்களவர்களின் ஈர இதயத்தைநோக்கி நகருவது சிறந்ததே!.”/DEMOCRACY

    சரி! இனிமேல் எமக்கு அடிவிழாது. எமது பிரதேசம் பறிபோகாது. தொழில், கல்வி எதிலும் பாரபட்சம் வராது என்ற உறுதியை அரசியலின் ஊடாக உறுதிப்படுத்த முடியுமா?

    சுயநிர்ணய உரிமை பற்றி கேட்டால் சிங்கள மக்கள் பயப்படுகிறார்களாமே! எம்மை என்ன செய்ய சிங்கள மக்களும் அதன் தலைமையும் முடிவு செய்துள்ளனர்?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Mr யாழ்ப்பாணி!, நீங்கள் யாழ்ப்பாணி என்று பெயர் போட்டு, என்னுடைய “கோபத்ததை” தூண்டினால், நான் உங்களுக்கு எதிரான கருத்தை கூறுவேன் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். இவ்வளவு தீவிரமாக சிந்திப்பதே ஒரு குறைதான்!. திருநெல்வேலி தாக்குதலிலிருந்து, மாவிலாறு, கடைசியான “ரணிலை கவிழ்த்த” அரசியல் வரை, இத்தகைய தப்புக் கணக்குகள் இழைந்தோடுவதைக் காணலாம்!. தமிழரின் இனவாதத்திற்கு, “தமிழர் உரிமை”, “அரசியல் மூலமான உறுதி” என்று பெயரிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்!. உலகில் எங்கும் ஆதரவில்லாமல், கடலில் தூக்கி எறியப்படுவோம் என்ற பயம் சிங்களவருக்கு இருந்தவரை தமிழருக்கு மரியாதை கிடைத்ததது!. அந்த பயத்திற்கு ஆறுதல் தராமல், அதை அதிகரித்தது, “இலங்கைத் தமிழரது இனவாதம்”!.

    Reply
  • BC
    BC

    //Warren – வைகோ ராமதாஸ் திருமாவளவன் போன்றோர் தமிழ் நாட்டிலுள்ள புரட்சிகர அமைப்புகளினால் இந்திய மத்திய அரசினை அம்பலப்படுத்தி எமக்கு ஆதரவாக போராடிய போது… //
    தமிழ் நாட்டிலுள்ள புரட்சிகர அமைப்புகளின் நோக்கம், எதிர்பார்ப்பு சீமான், வைகோ, நெடுமாறன், திருமாவளவனுக்கு பதிலாக புலம்பெயர் தேசங்களில் உள்ள புலி ஆதரவாளர்கள் தங்களை அந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.மற்றும் படி இலங்கை தமிழர்கள் நலன்களை பற்றி எந்தவித அக்கறை கிடையாது. இலங்கையில் யுத்தம் தொடர்வது அவர்களது தேவை.

    Reply
  • jalpani
    jalpani

    “அந்த பயத்திற்கு ஆறுதல் தராமல், அதை அதிகரித்தது “இலங்கைத் தமிழரது இனவாதம்”!.”// DEMOCRACY

    எத்தனை நாள்தான் புலிக்கு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சனையை முன்னிறுத்திக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “யாழ்ப்பாணி!”…எனக்கு சிரிப்புதான் வருகிறது!. ஒன்று நீங்கள் சிங்களவராக இருக்க வேண்டும் அல்லது இலங்கை அரசாங்க சலுகையில் தங்கியிருக்கும் பலவீனமான தமிழராக? இருக்க வேண்டும்!. ஒட்டு மொத்த “இலங்கையரையும்” நினைத்து தலையிலடித்துக் கொள்ளும் அதேவேளையில், ஒரு இலங்கையன் கீழே விழுந்து விட்டால் எப்படியெல்லாம் “சாணி மிதிப்பீர்கள்” என்று கற்றுக் கொள்ள முடிகிறது. “புலியின் ஊடாக” தமிழ் மக்களின் பிரச்சனையை “நாங்கள்” முன் வைக்கவில்லை, மாறாக,”தமிழ் மக்களின் பிரச்சனையை” இலங்கைத் தமிழர்கள் யாருமே முன் வைக்கவில்லை என்றுதான் புலம்புகிறோம்! .நோய்க்கான “பாக்டீரியா” வேரொன்று இருக்க, அவரவர் தாயாரித்த மருந்துகளை விற்க, எய்ட்ஸுக்கான மருந்து, ஸைவைன் புளு மருந்துவரை கொடுத்து, பயங்கர “பக்க விளைவுகளை” ஏற்ப்படுத்தி வைத்துள்ளீர்கள்.

    Reply
  • jalpani
    jalpani

    நீங்கள் சிங்களவர் என்கிறீர்கள். அல்லது அரசின் ஆள் என்கிறீர்கள். சந்திரன் ராஜாவோ புலி என்கிறார். ஏகாதிபத்தியங்களின் ஏஜண்ட் என்ற ஒன்றுதான் மிச்சமிருக்கிறது. அடுத்து அதையும் சொல்லுங்கள். சிரிப்புத்தான் வரும். நிற்க.

    அந்த பயத்திற்கு ஆறுதல் தராமல் அதை அதிகரித்தது “இலங்கைத் தமிழரது இனவாதம்”!.”

    இந்த பயத்தை ஏற்படுத்தியது புலி. அதற்கேற்ப பிரச்சனையை இழுத்தடித்து தாளம் போட்டு வளர விட்டது இலங்கை அரசு. இதற்குள் தமிழ் மக்கள் திணறுகிறார்கள். இப்போ புலியின் கதை முடிந்தது. பாக்டீரியா விற்கு மருந்து கொடுக்க யாருக்கும் மனசில்லை.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சந்திரன் ராஜா சொல்லுவது சரி!. யாழ்ப்பாணி என்ற பதம் என் அறிவுக்கு எட்டியவரை, புலிகளுக்கு எதிரான கருத்தை வைத்தது கிடையாது!. தற்போது வைக்கிறது என்றால், “சாணி மிதிக்கிறது” என்றால்!, “மனநோயின் அறிகுறி”. பாக்டீரியாவுக்கு மருந்து கொடுப்பது அப்போது சுலபம், தற்போதைய சூழ்நிலையில் நான் கவனமாகவே இருக்கிறேன் .உங்கள் மனநோய் உறுதியானால், “புலிகளை அழிக்கிறேன் பேர்வழி” என்று, “ஒரு இராட்சஷ முன்னுதாரணத்தை”, தெற்காசியாவில் ஏற்படுத்தி வைத்துள்ளீர்கள்!. ராஜீவ் காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பிரச்சனைகள் எங்களுக்கு உடன்பாடில்லை!. ஆதலால், பிரபாகரன் “அரசியல் வாழ்விலிருந்து மறைந்தது எங்களுக்கு திருப்தியே”. இந்தியாவின் நிலப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறோம், இது சிக்கலானது, ஜெயவர்த்தனா முதல் சந்திரிக்கா வரை கையாண்ட, “இலங்கை தேசிய இறையாண்மை என்றப் பதமும்”, முள்ளி வாய்க்கால் சம்பவம் வரை, “தமிழ் இனவாதத்திற்கு”, தமிழ் தேசிய பிரச்சனை, தமிழர் உரிமை என்ற மாற்றுச் சொல் பதமும், இந்திய நலனுடன் உடன்பாடில்லை. இவ்வளவு உயிர்களை பலிகொடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் ,”ஒன்றை வெளிப்படுத்தியது”, அது முழுமையாக கலைத்து மறு சீரமைக்கப்பட வேண்டிய “இந்திய அதிகார குழுமத்தின் கையாளுகையால்” விளைந்தது. ஆனால் “புலன் பெயர் இலங்கைத் தமிழ் அமைப்புகள்” இதை “இரசித்து” “பாக்டீரியாவை” அடையாளம் காட்டாமல், தங்கள் மருந்துகளை “விற்பதிலேயே” கவனம் செலுத்தி, நான் மேற்குறிப்பிட்ட ,”இராட்சச முன்னுதாரணத்தை” ஏற்ப்படுத்தியுள்ளனர். போராட்டத்தின் பால் கரிசணை உண்டு!, ஆனால் அதை அழிக்கப்பட வேண்டிய “சூரனாக” நீங்கள் கருதினால், உங்களைப்பற்றி “சந்திரன் ராஜா” கூறியதில் என்ன தவறு இருக்கிறது

    Reply
  • jalpani
    jalpani

    பாலசிங்கம்தான் வந்து இந்த கருத்துக்கு பொழிப்புரை சொல்ல வேண்டும். யாருக்காவது ஏதும் புரின்றதா?

    Reply