அரச நிர்வாகம் அபிவிருத்தி மற்றும் மக்கள் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு புதிய நிர்வாக அலகுகளை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
அதன்படி புதிய பிரதேச சபை பிரிவுகள் புதிய கிராம சேவகர் பிரிவுகள் போன்றவற்றை அமைக்கவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் தொடர்பாக வர்த்தமானி மூலம் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.