இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க வடக்கில் விசேட ஏற்பாடுகள்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மற்றும் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்கமைய 20 விசேட வாக்குச் சாவடிகளும் கொத்தணி வாக்குச் சாவடிகளும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, வவு னியா மாவட்டங்களிலுள்ள வாக்கா ளர்களின் பெயர்ப்பட்டியல்களை அந் தந்த பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாக பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வுள்ளன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தேர்தல் நட வடிக்கைகள் குறித்து ஆராயவென நேற்று வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டமொ ன்று நடைபெற்றது.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்க ளுக்கு தற்காலிக ஆளடையாள அட்டையை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக ஆட்பதிவு திணைக்கள த்தின் அதிகாரிகள், தேர்தல் ஆணை யாளர் அலுவலக அதிகாரிகள், மாவ ட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர். துணுக்காய், மல்லாவி, ஜயபுரம், முழங்காவில் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 20 வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையங்க ளுக்கு வெளியேயும், நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு வாக்க ளிக்கும் விதத்தில் நிவாரணக் கிரா மங்களுக்கு வெளியேயும் கொத்தணி முறையிலான வாக்குச் சாவடிகள் அமைப்பது எனவும் முடிவு செய் யப்பட்டது. அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் அரச ஊழியர்களின் விபரங்களை சேகரிப்பது தொடர் பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் மூல வாக் காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என தேர் தல் திணைக்களம் அறிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிக்க இருப்பவர்கள் முடியுமானவரை குறிப்பி ட்ட 17ஆம் திகதிக்கு முன்னதாக நேரகாலத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *