1976 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் மொத்த நெல் உற்பத் தியில் 25சத வீதம் இம்முறை கிழக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வருட முதல் போகத்தில் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் மேலதிக காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட் டதையடுத்தே இவ்வாறான அமோக விளைச்சலை பெற முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, தகவல், தொழில்நுட்ப அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண அமைச்சர் மேலும் கூறியதாவது, மோதல் காரணமாக அழிந்திருந்த கிழக்கு மாகாணம் இன்று துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. 25 ற்கும் அதிகமான பாலங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் கிழக்கு பிரதேசம் முன்னேற்றம் கண்டு வருகிறது.