ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார்.
இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
Kurankan
இணைஞ்சுதானே ஆகவேணும். மஹிந்தரை விட்டால் வேறு வழி? ஒருவேளை சரத் பொன்சேக்கா வந்தால் இவர்களின் நிலை என்னவாகும்?
Ajith
Mahintha Sinthanai 1: Join me or join Bramha.
பல்லி
அது சரிதான் உங்களுக்கும் கருனாவுக்கும் என்னதான் பிரச்சனை?? மகாவலி கங்கை ஆறு பற்றியதா?? அல்லது கடுதாசி ஆலை பற்றியதா,?? இப்போது கட்டி பிடிப்பதுக்கு;;;;
பார்த்திபன்
அப்படியே உந்த இணைவை மக்கள் சேவையிலும் தொடர்ந்தால், கிழக்கு மாகாண மக்களுக்கும் நன்மை கிடைக்கும் அல்லவா??