காத்தான் குடியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மரணமடைந்துள்ளார். காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நஜிமுதீன் பாத்திமா ஆப்ரீன் (09) எனும் மாணவியே டெங்கு காய்ச் சலினால் மரணித்தவரென தெரிவிக்கப்ப டுகின்றது.
காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களில் 10 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.