வாக்கு மோசடி முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள விசேட பிரிவு – அழையுங்கள்: 0112-877629-31

election_box.jpgஇடம்பெறும் வாக்கு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவென தேர்தல் திணைக்களத்தினால் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் வாக்கு மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

0112-877629, 0112-877630, 0112-877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.

இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை வரை இந்த பிரிவு செயற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *