தேர்தல் வன்முறைகளில் ஈடுபடத் திட்டம் – 20 முன்னாள் கொமாண்டோக்கள் கொக்கரெல்லயில் கைது

தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின் போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக் குழுவினரே மேற்படி இருபது முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 20 பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி. ஐ. டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரியவந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *