தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நிறைவு; சுமார் 20 இலட்சம் பேர் கண்டுகளிப்பு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலயில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனை கொள்கையின் கீழ் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கியிருந்ததாக அவர் மேலும் கூறினார். அடுத்த ‘தேசத்துக்கு மகுடம்’ கண் காட்சியை பதுளை மாவட்டத்தில் நடத் துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பள்ளேகலயில் நடைபெற்ற கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தவதற்கு உதவிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நன்றி கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *