இலங்கை சமுர்த்தி அதிகார சபை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ந் திகதி ஏற்பாடு செய்துள்ள தேசிய மகளிர் தின விழா கண்டி நகரில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
தேசிய மகளிர் தின விழாவில் நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து இரு பெண்கள் வீதம் கலந்து கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.