பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வேட்பாளர்கள் சந்திக்கலாம்

dig.jpgபொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் தங்களது பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் அந்தந்த பிரதேசத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள வசதியாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் இணக்கப்பாட்டுடன் செயற்பட முடிவதுடன், பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *