உலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் நேற்று தமது 21 ஆவது வயதில் மரணமானார் என பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது. 2 அடி 5 அங்குலம் உயரம் மட்டுமே கொண்ட சீனாவைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தவேளை அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த மனிதரான சுல்தான் கோசனுடன் இவர் உரையாடி மகிழ்ந்தார். இவரது திடீர் மறைவு சீன மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிருபா
உயரமாய் நின்று உலகின் அழுக்குகளை காணும் வாய்ப்புகளை தவிர்த்த உயர்ந்த மனிதன்.