பொன்சேகா மீதான விசாரணை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான  விசாரணைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசு10ரியவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய 2ஆவது நீதிமன்ற விசாரணைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, சரத் பொன்சேகா மீது விசாரணை  மேற்கொள்ளும் முதலாவது நீதிமன்ற குழுக்கூட்டமும் இன்று நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *