‘தமிழீழம் பெற்றுத் தருவேன் என்றெல்லாம் ஏமாற்றாமல் பிரதேசப் பிரச்சினைகளை முன்வைத்து வாக்குக் கேட்கிறேன்’ சுயேட்சை வேட்பாளர் க வரதீஸ்வரன்

Varatheeswaran_K‘நான் இலங்கையில் பத்து வயதாக இருக்கம் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று எனக்கு 40 வயதாக உள்ள போதும் இன்றும் இலங்கையில் இந்த அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ளது. நான் இம்முறை முதற்தடவையாக உள்ளுராட்ச்சித் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.’ எனத் தெரிவித்தார் நியூஹாம் கவுன்சிலின் வோல் என்ட் பிரிவில் போட்டியிடுகின்ற வரதீஸ்வரன் கனகசுந்தரம். இவர் மே 6ல் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார்.
 
தான் வாழும் வாட்டில் 7 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அதில் 45 சதவிகிதத்தினரே வாக்களிப்பில் கலந்து கொள்வது வழக்கமானது என்றும் அதாவது அண்ணளவாக 3500 வாக்காளர்களே வாக்களிப்பர் என்றும் இந்த வாக்காளர்களில் 2 ஆயிரம் வாக்களர்கள் மட்டில் தமிழ் வாக்காளர்கள் என்றும் இந்த தமிழ் வாக்காளர்களில் ஆயிரம் வாக்காளர்கள் தனக்கு வாக்களித்தால் தான் உள்ளுராட்சி சபையில் ஒரு அங்கத்தவராகிவிடலாம் என்றும் வரதீஸ்வரன் கனகசுந்தரம் கணக்குப் பண்ணி உள்ளார்.

அவர் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இங்கு பதிவிடப்படுகின்றது.

தேசம்நெற்: நீங்கள் வசிக்கும் கவுன்சிலில் 60 அங்கத்தவர்களில் 54 பேர் லேபர் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளனர். அப்படியான லேபர் பகுதியில் நீங்கள் எப்படி சுயாதீன வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?
 
வரன்: லேபர் பெரும்பான்மையாக உள்ளபோதும் எனது வாட்டில் லேபர் கட்சியினர் கடந்த 13 வருடங்களாக எந்த முன்னேற்றமான காரியங்களையும் செய்யவில்லை. எமது வாட்டில் மேம்பாலம் (Overhead Bridge) ஒன்றுள்ளது. இந்த பாதையே மக்கள் சுலபமாக ரெயில்வே நிலையத்திற்கு போய்வரக் கூடிய பாதை. இந்த மேம்பாலம் அருகே பற்பல சமூகவிரோத செயல்களும் இளைஞர்களின் வழிப்பறிமுதல்களும் குறிப்பாக  பெண்களிடம் கைப்பைகளை பறிப்பதுமாக பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இரவில் இந்த மேம்பாலம் ஆபத்து நிறைந்த இடம் இந்த பாலத்திற்கு ஒரு சிசிரிவி பொருத்தும்படி ஆயிரத்திற்கு மெற்ப்பட்ட மக்கள் கையெழுத்துப்போட்டு மனுக்கொடுத்தும் இந்த லேபர் கட்சியின் உறுப்பினர்கள் செவிசாய்க்கவில்லை இந்தப்பிரச்சினை இந்தப்பகுதி மக்களின் முக்கிய விடயமாக உள்ளது. இதைவிட இந்த பிரதேசத்தில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்தும்படி லேபர் உறுப்பினர்களிடம் கேட்டும் அவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.
 
நான் உள்ளுராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் எமது முக்கிய தெருவான Buregers Road இல் உள்ள பெருநிலத்தில் பூங்கா ஒன்றை உருவாக்குவேன், ஒரு கிறமர் பாடசாலையை உருவாக்குவேன், இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்த கட்டண அரச வீடுகளை பெற்றுக் கொடுப்பேன், முக்கியமாக இந்த வாட்டின் பாதுகாப்பினை மேம்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
 
தேசம்நெற்:  ஒரு சுயேட்சையாக இவ்வளவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயலுமான விடயமல்ல. இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கு பலமான ஆதரவு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியடையும் பட்சத்தில் அது சாத்தியமாக இருந்திருக்கும்..
 
வரன்: எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் எனது ஆதரவுப்பலம் தான் முக்கியம். அந்த ஆதரவுப்பலம் எப்படி என்பதை நிரூபித்தால் தான் எந்தக் கட்சியினரும் எனக்கு தமது கட்சியில் இடம் தருவார்கள். நான் கூடிய அளவு லிபரல் கட்சியுடனேயே இணைந்து வேலை செய்ய விரும்புபவன். காரணம் லிபரல் கட்சிதான் தற்போதுள்ள கட்சிகளின் கொள்கைகளில் பரந்துபட்ட மக்களுக்கானதும் குடியேறியவர்களுக்கான அகதிகளுக்கானதுமான கொள்கைகளைக் கொண்டுள்ளது. எனது வட்டாரத்தில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டவர்கள், குடியேறியவர்கள். நான் தமிழர்க்கு ஆதரவான கட்சியுன்தான் இணைவேன்.

தேசம்நெற்: உங்கள் கடந்தகால அரசியற் பின்னணிகள் என்ன? 

வரன்: நான் இலங்கையில் 10 வயதாக இருக்கும் போது தமிழ் மாணவ அமைப்பில் இருந்தேன். பின்னர் ஈரோஸ் இன் மாணவ அமைப்பான  மாணவ இளைஞர் அமைப்பிலும் (GUYS) பின்னர் ஈரோஸ் அமைப்பு புலிகளால் 1990ல் தடை செய்யப்படும் வரையில் ஈரோஸ் அமைப்பிலும் இணைந்து வேலை செய்திருந்தேன். பின்னர் கொழும்பில் இலங்கை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகி இப்போது இங்கே வாழ்கிறேன்.

ஆனால் இங்கிருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்காக புலம்பெயர்ந்த தமிழீழம் பெற்றுத்தருவேன் என்று ஏமாற்றாமல் உண்மையை சொல்லி அங்குள்ள மக்களின் பிரச்சனையை அங்குள்ள மக்களும் அவர்களின் பிரதிநிதிகளுமே செய்ய வேண்டும். நாம் ஆதரவு அளிக்கலாமேயன்றி அந்த மக்களை நாடு கடந்த தமிழீழம் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் போல நடக்கக் கூடாது. இங்கே எமது வாழ்க்கை பிரச்சினைகள் வளர்ந்து விட்டது அதை நாம் முகம் கொடுப்பதும் அவசியமானது.

ஆனால் என்னை கொன்சர்வேற்றிவ் தமிழ் வேட்பாளர் நான் ஒரு இலங்கை அரசின் கைக்கூலி என்றும் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று என்னைப் பற்றி தேவையில்லாத விசமத்தனமான பிரச்சாரத்ததை மேற்கொள்கிறார். இந்த வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அம்மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்.
 
தேசம்நெற்: உங்கள் பிரசார வேலைகள் எப்படி நடைபெறுகிறது? மக்கள் ஆதரவு அளிக்கிறார்களா?
 
வரன்: எனது பிரச்சாரத்திற்கு 500 பவுண்ஸ் மட்டிலேயே செலவு செய்தேன். இது எனது சொந்தப் பணத்தில் தான் செய்தேன். அத்துடன் அதுல்யா என்ற தொலைபேசி அட்டை கம்பனியினர் எனக்கு வேண்டிய உதவிகளையும் செய்து தருகிறார்கள், ஜிரிவியில் விளம்பரம் போட்டுள்ளேன்.
 
மக்களிடம் வீடு வீடாக போய் ஆதரவு கேட்டுள்ளேன். மக்கள் ஆதரவு தருவதாக சொல்லியுள்ளார்கள். மக்களின் ஆதரவு நிலையை பார்க்கும்போது குறிப்பாக தமிழ் மக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள் போல் தெரிகிறது. காரணம் மற்றய எல்லா தேர்தல் வேட்பாளர்களும் எமது வாட்டில் வசிப்பவர்கள் அல்ல. சிலர் வேறு பிரதேசங்களில் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது வட்டாரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தெரியாது. இவ்வளவு காலமும் எமது தமிழர்களுக்கு பிரதிநிதியாக இருந்தவர்களில் மலையாளியும் வெள்ளை இனத்தவருமே கூட. தமிழர்கள் என்னை தெரிவு செய்வார்கள் என திடமாக நம்புகிறேன்.
 
புலம்பெயர்ந்த நாட்டில் எமக்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பாராட்டுகிறேன் இப்படியான ஜனநாயக சுதந்திரம் எமது தமிழ் மக்களுக்கு இலங்கையின் வட – கிழக்கு பிரதேசங்களில் முழுமையாக கிடைக்க வழிவகைகளும் செய்யப்பட வேண்டும்.

Show More
Leave a Reply to KARUNA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • KARUNA
    KARUNA

    அவசர காலசட்டத்தை தானே எடுக்கப்போறாங்களே!

    வாக்களர்களை கணக்கு பண்ணத்தெரிந்த உங்களுக்கு உங்கள் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி வேணும் என்று தெரியவில்லையே! உங்களுக்குதான் என்னுடைய வாக்கு!

    Reply
  • meerabharathy
    meerabharathy

    Hi Varan (Mosad)….
    How r u huma….
    Happy to see u here….
    I am bharathy…..
    I always remember you….
    please email me….
    meerabharathy@hotmail.com
    thanks
    bharathy

    Reply