யாழ்குடா நாட்டில் திடீரெனப் பெய்த கடும் மழையினால் மக்கள் பாதிப்பு!

May 17 2010  யாழ்.குடாநாட்டில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. சில வீடுகளின் கூரைகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமாகின். மின்சாரமும் முழுவதுமாக குடாநாட்டில் தடைப்பட்டது.  இன்று (May 18 2010) காலையிலேயே மின்சார விநியோகம் யாழ்ப்பாணத்தில் சீர்செய்யப்பட்டது.

இதேவேளை, கொழும்பு உட்பட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். தெற்கில் 2இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கொழும்பு, களுத்துறை, கம்பகா, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரற்ற இக் காலநிலை சில நாட்களுக்குத் தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *