இந்திய அரசுடன் பேச்சுநடத்த தீர்மானம்

இந்திய மீனவர்கள் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த கடற்றொழில் மீன்பிடி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குச் செல்லும் மீன்வர்கள் இந்திய படையினரால் கைதாவது அடிக்கடி இடம்பெறுவதால் இது தொடர்பில் நிரந்தர தீர்வு காண உள்ளதாக மீன்பிடி அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இது தவிர இந்திய இலங்கை கடல் எல்லையை அறியக்கூடிய தன்னியக்க சமிக்ஞை முறையொன்றை அறிமுகப்படுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட விரோதமாக இந்திய கடல் எல்லைக்கு செல்வதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *