அண்மை யில் இலங்கையில் குறிப்பாக தென்பகுதியில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிற்றில் எய்ட் சிறு உதவி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. மே 26ல் லிற்றில் எய்ட் உதவியாளர்கள் கம்பகா மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு சித்தாவத்த என்ற பகுதியில் தங்கியிருந்த 175 குடும்பங்களுக்கு சிறு உதவி நடவடிக்கையை மேற்கொண்டனர். 55 000ரூபாய் (335 பவுண்) செலவில் மேற்கொண்டது. சென் ஜோசப் தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய அருட் தந்தை ஆயந்த வித்தான இக்குடும்பங்களுக்கான உணவுப் பொதிகளை விநியோகித்தார். http://littleaid.org.uk/little-aid-sends-food-aid-to-flood-victims-in-the-gampaha-district-sri-lanka
ரகம நிகம்பு ஆகிய பகுதிகளுக்கான பிரிதான மருத்துவமனையான பாமுகம வைத்தியசாலைக்கான மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்கும் லிற்றில் எய்ட் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இம்மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட்டின் நீர்கொழும்பு களஞ்சியசாலையில் இருந்து சென் ஜோசப் தேவாலயத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பாமுகம வைத்தியசாலையின் தேவைக்கு ஏற்ப விநியோகிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அம்மருந்துப் பொருட்கள் டென்மார்க்கின் எல்லையற்ற வைத்தியர் அமைப்பினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே. http://www.youtube.com/watch?v=t1kzvHn_GqM
லிற்றில் எயட் அண்மையில் (மே 18ல்) தனது ஓராண்டைக் கடந்து பயணத்தை தொடர்கிறது. வன்னி யுத்தத்தில் இருந்து மீண்ட மக்களுக்கு மரக்கறி வகைகளை வழங்குவதில் ஆரம்பிக்கப்பட்ட அதன் உதவி நடவடிக்கைகள் ஓராண்டில் 1.54 மல்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துவகைகளை டென்மார்க் எல்லையற்ற மருத்துவர் அமைப்பினூடாகப் பெற்று இலங்கையில் பெரும்பாலும் வடமாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்தது. இவற்றினைவிடவும் பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருவதுடன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தாயக மக்களுக்கு உதவக் கூடிய அமைப்புகளை அங்கு உதவி வேண்டியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி விடுவதிலும் அதற்கான ஆணுசரணைகளை மேற்கொள்வதிலும் லிற்றில் எய்ட் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.
மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான கணணி நிலையம் ஒன்றையும் பனாங்கொட புனர்வாழ்வு மையத்தில் லிற்றில் எய்ட் அமைத்துக் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் வைபவரீதியான நிகழ்வு யூன் 6ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வன்னி யுத்தத்தின் முடிவில் ஆரம்பிக்கப்பட்டு உள்ள லிற்றில் எய்ட் அமைப்பு சாதி, மத, இன பேதங்களைக் கடந்து இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் புனர்வாழ்வு நடவடிக்கையிலும் தன்னால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. லிற்றில் எய்ட் அமைப்பின் கணக்கியல் கோவை மற்றும் அதன் உதவி நடவடிக்கைகளின் வெள்ப்படைத் தன்மை அதன் நம்பகத்தன்மையை வலுப்படுத்தி வருகின்றது. http://littleaid.org.uk/
samy
வாழ்த்துக்கள்; தொடரட்டும் உங்கள் பணி