புலிகள் தொடர்பான படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருந்ததாக வவனியாவில் ஒருவர் கைது.

கைத்தொலைபேசியில் புலிகள் தொடர்பான விடியோ காட்சிப் படங்களை வைத்திருந்தாகக் கூறி வவனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குடாப் பகுதியில் வைத்து இவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பற்றிய வீடியோ காட்சிகள், புகைப்படங்கள், பாடல்கள் என்பன அவரது கைத்தொலைப்பேசியில் காணப்பட்டதாகக் கூறியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *