நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச்சு10ட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிழந்தார். கடந்த 9ஆம் திகதி நெடுங்கேணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பெண்ணொருவரின் கைகளைத்தண்டித்து அவரது நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனா. அப்பெண்ணின் கணவரான இராசலிங்கம் (வயது 64) என்பவரை துப்பாக்கியாலும் சுட்டனர். கைத் துண்டிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மருத்துவ சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண்ணின் கணவரான இராசலிங்கம் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான விக்னேஸ்வரி கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் புளியங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.