வட மாகாணசபை அலுவலகத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது திருகோணமலையில் இயங்கிவரும் இந்த அலவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியில் அமைக்கப்படுவதே பொருத்தமானது என கருதப்படுவதால்ää கிளிநொச்சி நகருக்கும் இரணைமடுச்சந்திக்கும் இடைப்பட்டää ஏ-9 விதிக்கு மேற்காக அமைந்துள்ள அறிவியல்நகர் இதற்குப் பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் முன்னர் விடுதலைப்பலிகளால் அமைக்கப்பட்டுள்ள பல கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.