புனர் வாழ்வளிக்கப்பட்டுவரும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களுள் 53 ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் இத்திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன.
முதலில் பதிவுத் திருமணம் நடைபெறுவதுடன் இதனையடுத்து மத ரீதியான திருமணமும் நடைபெறும். இந்து, கிறிஸ்தவ குருமார்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்து முறைப்படி நடைபெறும் திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்குரிய திருமாங்கல்யங்களை அகில இந்து மாமன்றம் வழங்குகிறது.
புத்தாடைகளையும் பரிசுப் பொருட்களையும் தொண்டர் நிறுவனங்களும் நலன்விரும்பிகளும் வழங்க முன்வந்துள்ளனர். புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகரா புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர். திருமணமான பின்னர் ஒவ்வொரு ஜோடியும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படும் வரை மெனிக் பாம் பகுதியில் தனித்தனியான வீடுகளில் தங்க வைக்கப்படுவர்.
திருமணத்திற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகம் ஒரு தொகை நிதியை இவர்களுக்கு வழங்கும் என்றும் அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். இத்திருமண வைபவத்தில் உற்றார், உறவினர் அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
BC
இந்த 53 புலி ஜோடிகளின் திருமணத்தில் டக்ளஸ்சும், புலி ஆதரவாளர்களின் கோபத்தை சம்பாதித்த சுப்பர் ஸ்டார் விவேக் ஒப்ராய்யும் கலந்து கொண்டார்களாம். தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள்.