யாழ். சிமெந்து தொழிற்சாலை – உயர்மட்டக்குழு நாளை யாழ். வருகிறது.

KKS_Cement_Factoryகாங்கேசன் துறை சிமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சிமெந்து நிறுவனம் ஆகியவற்றின் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வது குறித்து ஆராய உயர்மட்டக் குழுவொன்று நாளை (24-06-2010) யாழ்ப்பாணம் வரவுள்ளது. இவ்விரு நிறுவனங்களினதும் தலைவாராக நியமனம் பெற்றுள்ள தேசமானி எஸ.ஜே.பரணகம தலைமையில் கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் நாளை வருகை தருகின்றனர். 

தொழில்சாலையின் செயற்பாடுகள் பற்றி விளக்கவதற்காக செய்தியாளர் சந்திப்பு ஒன்று நாளைக் காலை 9 மணிக்கு இணுவிலில் உள்ள லங்கா சிமெந்து நிறுவன அலவலகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *