தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு! கட்சியை பதிவு செய்ய முடியவில்லை!

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்று (யூன் 29 2010) பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியான போதும் இறுதித் தருணத்தில் அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனியான கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் சிலர் அதன் தலைமைக்கு வலியுத்தி வந்தனர். அதன்படி நேற்று அக்கட்சி பதிவு செய்யப்படவிருந்தது.

இறுதி நேரத்தில் கூட்டமைப்பிருக்கிடையில் எற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இது கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. கட்சியின் பதவி நிலைகள் தொடர்பாகவே அம்முரண்பாடுகள் எற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவமளிக்கும் விதமான முயற்சிகளில் அக்கட்சியின் உறுப்பினர்களான இரா.சம்பந்தரும். மாவை சேனாதிராஜாவும் ஈடுபட்டு வருவதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் எற்கனவே தோன்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் முடிவிலேயே கட்சி இயங்குவதாகவும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமே தகவல்கள் பரிமாறப்படுவதில்லை முடிவுகள் எடுக்கப்படும் போது கலந்துரையாடப்படவில்லை என ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவும் இந்த மூக்கூட்டினால் எடுக்கப்பட்டு ஜனாநாயக நடைமுறைக்கு மாறாகவே பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது.

இவ்வாறு தங்களிலும் மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களை அவர்கள் புலிகள் என்று முத்திரையைப் பயன்படுத்தி இரா சம்பந்தன் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடத்தை வழங்க மறுத்தார். அதனால் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடு புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும். தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக் கட்சியை புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம்காட்டி வந்தனர். அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை புதிய கட்சியாகப் பதிவு செய்யும் ஆர்வம் பெருமளவில் இல்லை. ஆனால் ஏனைய விடுதலை இயக்கங்கள் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தங்கள் அடையாளங்களை தமிழரசுக்கட்சியின் அடையாளத்தினுள் புதைப்பது சற்று கடினமானதே.

இந்த முரண்பாடு எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது வெகுவிரைவில் தெரியவரும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Silambu
    Silambu

    இயக்கங்கள் ஒண்டுக்குள்ளை ஒண்டு அடிபட்டு மக்ளையும் நாட்டையும் கொன்று தின்று முள்ளிவாய்காலில் மூச்சையாகினர். இனி இவர்களும் பிடுங்குப்பட்டு மிச்சம் மீதுயுள்ள சனத்தையும் முடிச்சுப்போடுங்கோ.

    Reply
  • Sampanthan
    Sampanthan

    Tamil Alliance hands in application to register it as a political party in Sri Lanka

    The Tamil National Alliance (TNA) has handed in an application Wednesday to Sri Lanka’s Elections Commissioner to register it as a political party. TELO Leader and TNA parliamentarian Selvam Adaikkalanthan said that the leader of the TNA party has been named as parliamentarian R. Samapanthan and the joint secretaries of the party would be parliamentarians ITAK Leader Mavai Senathirajah,EPRLF Leader Suresh Premachandran and TELO Leader Selvam Adaikalanadan. Earlier TNA it was not registered. Hence TNA contested on the ticket of Ilankai Thamil Arasu Katchchi (ITAK).

    Reply