கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.  சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துள்ள நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள இம்மக்களின் நகை. பணம் போன்றவற்றை இரவு வேளைகளில் சென்று அபகரித்துச் செல்லும் கள்வர்களால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசிக்கும் ஒருவருடயை வீட்டினுள் புகுந்த கள்வர்கள் அவரிடமிருந்த பணம். நகை. மற்றும் சில பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். இறுதிக்கட்டப் போரில் காயமுற்றதால் நடமாடமுடியாத நிலையில் உள்ள அவரது விட்டிலேயே இக்கொள்ளளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கதவுகள். யன்னல்களற்ற வீட்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் கள்வர்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மீள்குயேற்றப்பட்டுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியுள்ளதால் கள்வர்களின் செயற்பாடுகளுக்கு அது இலகுவாகவுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *