முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

LandMine_Signகண்ணி வெடியகற்றும் பணிகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 30 பெண் போராளிகளை ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு திர்மானித்துள்ளது. ஆறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஊடாக விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகளவிலான இராணுவத்தினர் தற்போது கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளை, வன்னியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் தற்போது கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்கள் அகற்றுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்க@டாக பணிபுரிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *