கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வன்னியில், கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி. துணுக்காய் பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட்ட குறிப்பிட்ட சில மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முற்றாக வீடுகளை இழந்தோருக்கான கொடுப்பனவான மூன்னறரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இத்திட்டத்தின் அடிப்படையில் சில வீடுகள் அமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சிலவற்றிற்கான வீடமைப்பு கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கபட்டு  வருகின்றமையும் குறிப்படத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *