MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

MoU+Meeting_08Aug10Whilst the Sri Lankan Opposition parties have on 8 August 2010 called on the Government (GOSL) to release the draft constitutional and electoral reforms that are to be amended and how they will be amended in the proposed new Sri Lanka Constitution, an important milestone in uniting the Tamil diaspora in London was achieved on the same day.

A representative gathering of over 50 members of Tamil and Muslim political parties, independent researchers and general public gathered at Walthamstow, East London unanimously endorsed a Memorandum of Understanding of all Tamils and Muslim communities in London to implement at the earliest opportunity the guidelines consisting of Nine (9) Minimum Aspirations of All Tamils and Muslims for circulation among the wider diaspora around the world and in Sri Lanka.

MoU_Meeting_08Aug10These Minimum Aspirations – the Walthamstow Guidelines – are not demands on the Government (GOSL) for the settlement of the Tamil problem, but are the accepted minimum conditions to be recommended to all elected Tamil and Muslim political parties and their representatives in Sri Lanka and all Tamil & Muslim diaspora  for co-operation with the Government (GOSL) to alleviate the suffering of the Tamil speaking peoples, as well as to lend support to the Government (GOSL) to amend the Constitution of Sri Lanka speedily.

The Walthamstow Guidelines are practical and pragmatic principles within a set timeframe for requesting implementation by the Government (GOSL) for good governance, reconciliation and enduring peace in Sri Lanka. The Guidelines were formulated by an all party Tamil and Muslim sub-committee consisting of political activists, adversaries, independent researchers and think tank who studied the Tamil intransigence and political naivety over one year and made these guidelines in a Consultation Paper to the larger diaspora and which was unanimously accepted by the Tamil and Muslim representatives at yesterday’s ,meeting.

The list of the Nine Minimum “Walthamstow Guidelines”  will be published soon.

Victor Cherubim
8 August 2010.

ஓகஸ்ட் 08 ஞாயிறு : தமிழர்களிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவதற்கான சந்திப்பு : தேசம்

தமிழ் அரசியல் தலைமைகளிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவும் அப்புரிந்துணர்வை தொடர்ந்தும் தக்க வைப்பது பற்றியுமான கலந்துரையாடல் ஓகஸ்ட் 8 2010 இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் பிரிவுகளினின்றும் ஆர்வலர்கள் கலந்தகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் முதலாவது அம்சமாக அண்மையில் இலங்கை சென்று ஓகஸ்ட் 6 2010ல் லண்டன் திரும்பியுள்ள வாசுதேவன் இலங்கையின் தற்கால யாதார்த்த நிலவரம் பற்றி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய கலந்துரையாடல் இடம்பெறும்.

அதனை அடுத்து கலந்துரையாடலின் முக்கிய அம்சமான குறைந்தபட்ச புரிந்துணர்வு மற்றும் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் பற்றிய விடயம் கலந்துரையாடப்படும். குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவது அதற்கான வரையறைகள் பற்றி கடந்த ஓராண்டு காலமாக இடம்பெற்ற விவாதங்களை ரவி சுந்தரலிங்கம் வி சிவலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

அவர்களுடைய தொகுப்புகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். கலந்துரையாடலின் முடிவில் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் எது என்பதனை கூடி உள்ளவர்களின் ஒப்புதலுடன் தீர்மானிமாக்கப்படும்.

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பின் பொதுத்தளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான மேலதிக விவாதங்கள் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்று அவை பரவலாக்கப்படும்.

இக்கலந்தரையாடல் தேசம் கூட்டங்கள் வழமையாக இடம்பெறும் குவார்கஸ் ஹவுசில் இடம்பெறாது. வோல்தம்ஸ்ரோவில் கீழுள்ள புதிய முகவரியில் இடம்பெறும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

._._._._._.

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08,  2010ல் : தேசம்

Thesam Logoஇலங்கைத் தமிழ் மக்களுடைய வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் மே 18 2009ல் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழலில் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். பல்வேறு முரண்பாடுகளும் பல்வேறு குறைபாடுகளும் இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளிடமே உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாகி நிற்பதனால் தமிழ் சமூகம் பலவினமான நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர்களை ஆயுத பலம்கொண்டு பலாத்காரமாக ஓரணியல் நிறுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலாலும் அத்தலைமைகளை ஓரணியில் கொண்டு வரமுடியவில்லை. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் வந்தவர்களும் உண்மையான முழுமையான புரிதலுடன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மே 18 2009ற்குப் பின்னான அவர்களின் அரசியல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்விற்கு வரவேண்டும் என்பது அவசியமானதாக இருந்தது. இப்புரிந்துணர்வு வெளி அழுத்தங்களால் உருவாவதைக் காட்டிலும் அவர்களின் சுயவிருப்பில் இருந்து அவர்களின் சிந்தனையில் இருந்து உருவாவது அந்தப் புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும்.

02Aug09_Audienceஇப்புரிந்துணர்வை எட்டுவதை அடிப்படையாகக்கொண்டு யூன் 21 2009இல் ‘அடுத்த நகர்வை நோக்கிய ஒரு பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் தேசம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

Constantine_T_and_Srithunga_Jதமிழ் மக்களைப் பாதிக்கின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த 13 ஆண்டுகளாக தேசம் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது. 2002ல் மலேசியத் தமிழ் அறிஞர்களை வரவழைத்து மலேசிய தமிழ் இலக்கியம் – நூல் கண்காட்சியும் கலந்துரையாடலும், 2006இல் கலாபூஷணம் பி எம் புன்னியாமீன் அவர்களை வரவழைத்து தமிழ் – முஸ்லீம் இனஉறவுகள், 2007ல் கொன்ஸ்ரன்ரைன் தலைமையில் லண்டன் வந்திருந்த ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல், 2008இல் 13வது திருத்தச்சட்டம் பற்றிய சந்திப்பு இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் தேசம் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. 

இவ்வாறு சமகால விடயங்களை கலந்துரையாடி விவாதிக்கும் தேசம் யூன் 21 ஏற்படுத்திய சந்திப்பில் பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்துக்களையும் அரசியல் பின்னணியையும் உடையவர்கள் கலந்துகொண்டு  பல்வேறு அரசியல் கருத்துக்களையும் முரண்பாடுகளையும் உடையவர்கள் மத்தியில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அதற்கான உரையாடல் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சந்திப்பில் இலங்கையில் செயற்படுகின்ற பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Shanmugaratnam Nஅதன் அடிப்படையில் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் பேராசிரியர் என் சண்முகரட்ணம், வியூகம் ஆசிரியர் ரகுமான் ஜான் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் கீழுள்ள எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்று  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

02Aug09_Audienceஇந்த எட்டு விடயங்களிலும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறை என்ன என்பது பற்றி ஆராய்ந்து உடன்பாடு எட்டுவதற்கு 15 பேர் கொண்ட செயற்குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் 12 சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் இதுவே இறுதியானது அல்ல. இந்த வரையறையை நிர்ணயம் செய்ய கேட்டுக்கொண்ட யூன் 21 2009, ஓகஸ்ட் 02 2009 பொதுக் கூட்டத்தளத்தைக் மீண்டும் கூடி அவர்களின் கருத்துக்களையும் பெற்று இந்தக் குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இது பற்றிய விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போது அன்றைய நிலைமைகள் புரிந்துணர்வு எட்டப்படுவதற்கான தேவையை வலியுறுத்திய போதும் கட்சிகள் தேர்தல்களை எதிர்நோக்கி இருந்த அப்போதைய சூழல் புரிந்துணர்விற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Tamil_PP_28July10யூன் 24 2010இல் முதலில் சந்தித்த தமிழ் கட்சிகள் தற்போது தொடர்ச்சியாக 3 சந்திப்புக்களை மேற்கோண்டு தமக்கிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கும் தமிழ் மக்களுடைய நலனை முன்னிலைப்படுத்தும் பொது வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படவும் முன் வந்துள்ளன. மேலும் சந்திப்புக்கள் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பணிமனையிலோ என்றில்லாமல் பரஸ்பர உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தமிழ் கட்சிகளின் அடுத்த சந்திப்பை கிழக்கு மாகாணத்தில் நடாத்த முதலமைச்சர் சந்திரகாந்தன் அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி அச்சந்திப்பு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இத்தமிழ் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டிற்கு வரும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மௌனமாகவே உள்ளது. தமிழ் மக்களின் கூடிய பிரதிநிதித்துவத்தை வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியம் என்பதனை ஏனைய கட்சிகள் அறிந்தே தமது அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொருவருமே பொறுப்புடையன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் கூடிய பொறுப்புடையது. பெரும்பாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதன் தலைமைகளை உருவாக்கியது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே. அந்த வகையில் வி ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, ஆர் சம்பந்தன் ஆகியோர் தாங்கள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகளுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்து தமிழ் மக்களுடைய நலன்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுப்பதுடன் தமிழ் மக்களுடைய அரசியல் சமூக பொருளாதார வாழ்நிலையின் தரத்தை உயர்த்துவதற்கு முன்வர வேண்டும்.

தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் தமக்கிடையேயான முரண்பாடுகளுடன் முட்டிமோதி காலத்தையும் நேரத்தையும் விணடிப்பது தமிழ் மக்களின் வாழ்நிலையையே கீழ்நிலைக்கு இட்டுச்செல்ல காரணமாகிறது. அதனால் தமிழ் கட்சிகளிடையே ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அழுத்தங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் வழங்கப்பட வேண்டும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறையைச் செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஆன சந்திப்பு ஓகஸ்ட் 08 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னைய சந்திப்புக்கள் பற்றிய விபரமும் இணைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறையை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்னையை சந்திப்புக்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to LUCKY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • maran
    maran

    இவ்வாறான சநதிப்புககளை புலம் பெயர் நாடுகள் அனைத்திலும் தேசம் நடாத்த வேண்டும். தேசத்திற்கு அதிகளவு வாசகர்கள் ஜேர்மனி பிரான்சு கனடா அமெரிக்கா டென்மாரக் சுவீடன் நோர்வே கொலள்ட் போன்ற நாடுகளில் உள்ளார்கள். இவர்களை ஒருங்கிணைக்கவும் ஒரு கருத்து பரிமாற்றம் கருத்து தெளிவிற்கும் இது உதவி புரியும்

    Reply
  • padamman
    padamman

    நல்ல விடயம் இதில் எல்லோரும் பங்கு பற்றவேண்டும் குறைந்தபட்ச புரிந்துணர்வு இன்று காலத்தின் கட்டாயம் இதில் பங்கு பெற மறுப்பவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள்.

    Reply
  • Kalamohan
    Kalamohan

    இந்த முயற்சியில் வெற்றிபெற முதலில் தேசம் நெற்றிக்கும் அதன் இயக்குனர்களுக்கும் எனது முன் வாழ்த்துக்களும் ஆசிகளும்.

    இப்படிப் பட்ட ஒரு ஒருங்கிணைப்பை நாங்கள் ஏற்கனவே சுவிற்சர்லாந்தில் “புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனம் – சுவிற்சர்லாந்து” என்ற அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல முனெடுப்புக்களை இலங்கையில் செய்துவருகின்றோம். அந்த வகையில் எமது அமைப்பில், இலங்கையில்லுள்ள சகல இன மக்களையும், பல தமிழ்,முஸ்லிம் கட்சிகளையும் உள்வாங்கியுள்ளோம். எமது வேலைத்திட்டங்களை இன்றைய நாளில் இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிகொண்டிருக்கும் “யுகசத்தி மகளிர் சம்மேளனம்” என்ற அரசசார்பற்ற அமைப்பிணூடாக செய்துகொண்டிருக்கிறோம். எமது இந்த அமைப்பை உருவாக்குவதற்கு வழமைக்கு அப்பால் பல கூட்டங்களையும், காரசாரமான பல கருத்துப் பரிமாறல்களையும் செய்யவேண்யிருந்தது. அந்த வகையில் இங்கு எமது அமைப்பின் யாப்பை உங்கள் வாசகர்களினூடாக பகிர்ந்து கொள்வதனூடாக, இடம்பெற இருக்கும் உங்கள் சந்திப்புக்களிளும் கூட்டங்களிலும் ஏற்பட இருக்கும் பல சந்தேகங்களையும், எதிர்பார்ப்புக்களையும் முன்கூட்டியே தெளிவு செய்ய உதவியாக இருக்கும் என் நம்புகின்றேன்.

    இதோ எமது அமைப்பின் யாப்பு:

    1. பெயரும் அமைவிடமும்

    வரைவு 1.
    “புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனம் – சுவிற்சர்லாந்து”, “Forum fற்r srilankanische Diaspora – Schweiz (FSDS)”, “Forum for Srilankan Diaspora – Switzerland (FSDS)” என்ற பெயரின்கீழ், சுவிற்சர்லாந்தின் சமூகநிர்வாகச்சட்டத்தொகுப்பின்(Zivilgesetztbuch) – சட்ட இலக்கம் 60ff. இற்கு அமைவாக, சுவிற்சர்லாந்து சூரிச்(ZUERICH) நகரத்தை பிரதான அமைவிடமாகக்கொண்டு இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    2. இலக்கும் நோக்கங்களும்

    வரைவு 2.
    இலங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் மற்றும் பூர்வீக பாரம்பரியத்தையும் கொண்ட மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் அடிப்படை சனநாயக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், பேணுவதற்குமான நடைவடிக்கைகளை, எந்தவொரு அரசியல்கட்சி மற்றும் பிறஅரசுகள் சார்பற்ற முறையிலும், சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும், இலாப நோக்கமற்ற முறையிலும் சனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் மேற்கொள்ளுவதே பிரதான இலக்காகக் கொண்டிருக்கும். இப்பிரதான இலக்கினை அடைவதற்காக பின்வரும் நோக்கங்களை மையப்பொருளாகவும் கொண்டு செயற்படும்:

    1. இனங்களுக்கிடையிலான சம அந்தஸ்தையும், நட்புறவுவையும் பேணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் ஊக்குவித்தலும்.

    2. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு வறுமை மற்றும் இயலாமை நிலையிலுள்ள மக்களின் புனர்வாழ்விற்கும் உதவுதல்.

    3. இலங்கைத்தீவின் இயற்கை மற்றும் சுற்றுப்புறச்சூழலின் பாதுகாப்பிற்கும் அதன் மேன்பாட்டிற்கும் உதவும் வழிமுறைகளை ஊக்குவித்தலும் பரிந்துரை செய்தலும்.

    4. சுவிற்சர்லாந்துவாழ் இலங்கையர் மற்றும் இலங்கை வம்சாவழி மக்களின் சமூகநலன்களை பேணும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.

    3. அங்கத்துவம்

    வரைவு 3.
    18 வயதிற்கு மேற்பட்ட, இலங்கையர்களும், இலங்கைவம்சாவழி சார்ந்தவர்களும் மற்றும் அமைப்பின் யாப்பை ஏற்றுக்கொண்ட அனைவரும் அமைப்பினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விண்ணப்பப்படிவத்தை பெற்று அமைப்பின் அங்கத்துவதிற்காக விண்ணப்பிக்கலாம்.

    வரைவு 4.
    அங்கத்துவ விண்ணப்பங்கள் யாவும் நிர்வாகசபையின் ஆய்விற்குட்படுத்தப்பட்ட பின்னர், பொதுச்சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு, பொதுச்சபையானது அவ் அங்கத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலும், வருடாந்த அங்கத்துவ சந்தாவை செலுத்திய பின்னருமே, அங்கத்துவத்திற்காக விண்ணப்பித்த ஒருவர் பொதுச்சபை அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவார்.

    4. அங்கத்துவத்திலிருந்து விலகுதல் அல்லது நீக்குதல்

    வரைவு 5.
    அங்கத்தவரொருவர் தன் சுயவிருப்பின் பேரில் அங்கத்துவத்திலிருந்தோ அல்லது அமைப்பின் நிர்வாகப்பதவியிலிருந்தோ விலகுவதானால், தனது கைப்பட எழுதிய விலகல்கடிதத்தை, மூன்று(3) மாதங்களுக்கு முன்னதாக அமைப்பின் செயலாளருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். நிர்வாகசபை அக்கடிதத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் அவ்விடயம் பொதுச்சபையின் கவனத்திற்கு விடப்பட்டு, பொதுச்சபை அப் பதவிவிலகலையோ அல்லது அங்கத்துவ விலகலையோ அங்கீகரிக்குமானால், குறித்த உறுப்பினர் அன்றிலிருந்து தனது பதவியிலிருந்தோ அல்லது உறுப்பினர் உரிமையிலிருந்தோ விலகிக்கொண்டவராவர்.

    வரைவு 6.
    நிதி மோசடி, பதவி துஸ்பிரயோகம் மற்றும் அமைப்பின் நோக்கங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஊறுவிளைவித்தல் என்பன மிகப்பெருந்தவறுகளாக கருதப்படும்.

    வரைவு 7.
    உறுப்பினரொருவர் அமைப்பின் யாப்புவிதிகளுக்கு மாறாகவோ அல்லது அமைப்பின் வளர்ச்சிக்கு எதிராகவோ செயற்படுகிறாரென ஏனைய உறுப்பினரொருவரால் குற்றச்சாட்டு வைக்கப்படும் பட்சத்தில், நிர்வாகசபையானது அவ்விடயத்தை பொதுச்சபையின் கவனத்திற்கு முன்வைக்க வேண்டும். பொதுச்சபையினால் குறித்த உறுப்பினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், குற்றச்சாட்டப்பட்ட உறுப்பினர் அன்றையதினமே அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவராவர்.

    வரைவு 8.
    பொதுச்சபைத் தீர்மானங்களின் அடிப்படையில், பதவிவிலகல் மற்றும் பதவிநீக்கல் கடிதங்கள் யாவும் அமைப்பின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு குறித்த நபருக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.

    5. நிதி

    வரைவு 9.
    அமைப்பின் இயங்குதலுக்கும் மற்றும் அதன் செயற்திட்டங்களுக்குமான நிதியானது பின்வரும் மூலங்களிலிருந்து பெறப்படும்:

    1. உறுப்பினர் வருடசந்தாக்கள்
    அ) தனிநபர் வருடசந்தா – 120.- Sfr.
    ஆ) குடும்ப வருடசந்தா – 150.- Sfr.
    இ) சமூகநல உதவிநிதி பெறுவோர் வருடசந்தா – 60.- Sfr.

    2. நிதி அன்பளிப்புக்கள்
    3. செயற்திட்டக்களுக்காக நிறுவனங்களின் நிதி அனுசரணைகள்
    4. நிதி திரட்டுவதற்கான அமைப்பின் விசேட வைபவங்கள்

    வரைவு 10.
    அமைப்பின் கடன்நிலுவைகளுக்கு அமைப்பின் சொத்துக்களும் வருமானங்களும் மட்டுமே பொறுப்பானவையாகும். அமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் அமைப்பின் கடன்நிலுவைகளுக்கு தனிப்பட்டரீதியில் பொறுப்பாளிகளல்லர்.

    வரைவு 11.
    உறுப்பினர் வருடசந்தாவில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு, பொதுச்சபையின் பெரும்பான்மை பெற்றிருத்தல் அவசியம்.

    வரைவு 12.
    அமைப்பின் அணைத்து நிதிக்கொடுப்பனவுகள் மற்றும் நிதிக்கையாளுகைகளும் அமைப்பிற்கான வங்கிக்கணக்கிணூடாகவே நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

    வரைவு 13.
    அமைப்பின் வங்கிக்கணக்கிற்கும், அதன் பணப்பரிவர்தனைகளுக்கும் அமைப்பின் தலைவரும், பொருளாளரும் கூட்டாக கையொப்பமிடும் உரிமைகளைக் கொண்டவர்களாவர்.

    6. நிர்வாகம்

    வரைவு 14.
    அமைப்பின் நிர்வாகமானது பொதுச்சபை, நிர்வாகசபை என இருசபைகளைக் கொண்டதாக இருக்கும். இதில் பொதுச்சபையே எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அமைப்பின் தீர்மானங்களை முன்மொழியும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். பொதுச்சபையிலிருந்து நிர்வாகசபை தெரிவுசெய்யப்படும். நிர்வாகசபையானது அமைப்பின் சொத்துக்களையும், உடமைகளையும் முகாமைத்துவம் செய்வதற்கும், அமைப்பின் யாப்பிற்கு அமைவாக பொதுச்சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், முன்மொழிவுகளையும் செயற்படுத்துவதற்குமான அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.

    வரைவு 15.
    பொதுச்சபையானது அமைப்பின் இலக்கிற்கும், நோக்கங்களுக்கும் மற்றும் செயற்பாடுகளுக்கும் எதிரானதும் இடையூறானதுமான தீர்மானங்களை பொதுச்சபையின் பெரும்பாண்மையுடன் நிறைவேற்றும் அல்லது முன்மொழியும் பட்சத்தில், அத்தீர்மானங்களை செல்லுபடியற்றதாக்கும் மேலதிக அதிகாரத்தை அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்கள் கூட்டாகக் கொண்டிருப்பர்.

    7. பொதுச்சபை

    வரைவு 16.
    பொதுச்சபையானது, அமைப்பின் யாப்பையும் நோக்கங்களையும் ஏற்றுக்கொண்டு முறைப்படி உறுப்பினர் சந்தாவை செலுத்தி அங்கத்துவமான இலங்கையர்கள், இலங்கைவம்சாவழியைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரையும் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.

    8. நிர்வாகசபை

    வரைவு 17.
    நிர்வாகசபையானது
    அ). தலைவர்
    ஆ). உபதலைவர்
    இ). செயலாளர்
    ஈ). உபசெயலாளர்
    உ). பொருளாளர்
    என்ற இலாகாதளுவிய ஐவர்(5) உட்பட மொத்தம் பத்தொண்பது (19) பேரைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

    9. நிர்வாகசபைத்தெரிவு

    வரைவு 18.
    நிர்வாகசபையை(புதிய) தெரிவுசெய்வதற்கான பொதுச்சபைக்கூட்டத்தில் நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படல் வேண்டும். தலைவர் மற்றும் உபதலைவர் ஆகியோரையும் ஏனைய நிர்வாகசபை உறுப்பினர்களையும் பொதுச்சபையானது பொதுச்சபையிலிருந்து நேரடியாக தெரிவுசெய்யவேண்டும். இப்படித்தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் தமக்குள்ளாக ஒரு செயலாளரையும், உபசெயலாளரையும், பொருளாளரையும் தெரிவுசெய்ய வேண்டும். மேற்படி நிர்வாகசபைத்தெரிவின்போது இலங்கையிலுள்ள பிரதேச மற்றும் இனங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    10. கடமைகளும் அதிகாரங்களும்

    1). பொதுச்சபை
    வரைவு 19.
    அமைப்பின் செயற்திட்டங்களுக்கு அங்கீகாரமளிப்பது, நிர்வாகசபை உறுப்பினர்களை தெரிவுசெய்வது, புதிய அங்கத்தவர்களை உள்வாங்குவதற்கு அங்கீகாரமளிப்பது மற்றும் அங்கத்தவர்களை நீக்குவது தொடர்பான முடிவுகளையெடுப்பது பொதுச்சபையின் கடமைகளாகும்.

    2). நிர்வாகசபை
    வரைவு 20.
    நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வரைவு செய்வது, அத்திட்டங்களுக்கான அங்கீகாரத்தை பொதுச்சபையிடமிருந்து பெற்று அவற்றை நடைமுறைப்படுத்துவது, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகசபைக் கூட்டங்களை ஒழுங்குசெய்வது, செயற்திட்டங்களுக்கான நிதியினை கையாளுவது, அமைப்பின் உடனடித்தேவைகளை தீர்மானிப்பது என்பன நிர்வாகசபையின் கடமைகளாகும்.

    3). தலைவர்
    வரைவு 21.
    பொதுச்சபைக்கும் நிர்வாகசபைக்கும் தலைமைதாங்குவது, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகசபைக்கூட்டங்களை தலைமையேற்று நடாத்துவது என்பன தலைவரின் கடமைகளாகும்.

    4). உபதலைவர்
    வரைவு 22.
    தலைவரின் கடமைகளுக்கு உதவியாய் இருப்பது, தலைவர் இல்லாத சமயங்களில் தலைவரின் கடமைகளை பொறுப்பேற்றுச்செய்வது என்பன உபதலைவரின் கடமைகளாகும்.

    5). செயலாளர்
    வரைவு 23.
    நிர்வாக மற்றும் பொதுச்சபைக்கூட்டங்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுவது, அமைப்பு சம்பந்தமான நடைமுறைச்செயற்பாடுகளை எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பது மற்றும் அமைப்பு சம்பந்தமான எல்லா தபால் தொடர்புகளையும் மேற்கொள்ளுவதும், கூட்டறிக்கைகளை தயாரித்து அவற்றைப் பொதுச்சபையில் சமர்ப்பிப்பது என்பன செயலாளரின் முக்கிய கடமைகளாகும்.

    6). உபசெயலாளர்
    வரைவு 24.
    செயலாளரின் கடமைகளுக்கு உதவியாய் இருப்பது, செயலாளர் இல்லாத சமயங்களில் செயலாளரின் கடமைகளை பொறுப்பேற்றுச்செய்வது என்பன உபசெயலாளரின் கடமைகளாகும்.

    7). பொருளாளர்
    வரைவு 25.
    அமைப்பிற்கான நிதிமூலங்களை கண்டறிந்து அவற்றைச் சேமிப்பதும், செயற்திட்டங்களுக்கான நிதியினை பொதுச்சபை அங்கீகாரத்துடன் வளங்குவதும், அமைப்பின் வரவு – செலவு கணக்கறிக்கைகளை தயாரித்து பொதுச்சபைக்கூட்டத்தில் அதற்கான அங்கீகாரத்தை பெறுவதும் பொருளாளரின் முக்கிய கடமைகளாகும்.

    வரைவு 26.
    அமைப்பின் அணைத்து நிர்வாக மற்றும் நிர்வாகப்பற்ரற்ர பதவிகளும் பணிகளும் ஊதியமற்ற, சமூகசேவைகள் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
    11. பதவிக்காலம்

    வரைவு 27.
    பொதுச்சபையானது அமைப்பு இயங்கும் காலம்வரையிலான ஆயுள்கால பதவியைக்கொண்டிருக்கும்.

    வரைவு 28.
    நிர்வாகசபையானது ஆகக்கூடியது இரண்டு(2) ஆண்டுகால பதவிக்காலத்தை கொண்டதாக இருக்கும், ஆனால் பொதுச்சபையானது, நிர்வாகசபையின் பணிகளில் முளுமையாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு நிர்வாகப்பதவியின் மீதோ அதிருப்தி கொள்ளுமாயின் உடனடியாகவே முழுநிர்வாகத்தையோ அல்லது குறிப்பிட்ட நிர்வாக ப்பதவியையோ கலைத்து புதியவர்களைத் தெரிவுசெய்ய முடியும்.

    12. பொதுச்சபைக்கூட்டமும் நிர்வாகசபைக்கூட்டமும்

    வரைவு 29.
    பொதுச்சபைக்கூட்டமானது ஆகக்குறைந்தது வருடத்திற்கு ஒரு தடவையாவது கூட்டப்பட வேண்டும். விசேட தேவைகள் ஏற்படின் மேலதிகமான பொதுச்சபைக்கூட்டங்களையும் கூட்டலாம். வருடாந்த பொதுச்சபைக்கூட்டமானது இயலுமானவரை வருடத்தின் பங்குனி மாதத்தில் கூட்டப்படவேண்டும். விசேட பொதுச்சபைக்கூட்டங்களைத்தவிர ஏனைய பொதுக்கூட்ட அழைப்புக்கள் மூன்று(3) மாதங்களுக்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.

    வரைவு 30.
    நிர்வாகசபைக்கூட்டமானது வருடத்தில் ஆகக்குறைந்தது நான்கு(4) தடவைகளாவது கூட்டப்படுதல் வேண்டும்.

    வரைவு 31.
    நிர்வாகசபை அமர்விற்கு சமூகமளிக்கமுடியாத நிர்வாகசபை உறுப்பினரொருவர் தனது சமூகமளிக்கமுடியாமைக்கான அறிவித்தலை எழுத்துமூலமாக முன்கூட்டியே செயலாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

    வரைவு 32.
    தொடர்ந்து மூன்று(3) நிர்வாகசபைக் கூட்டத்தொடர்களுக்கு சமூகமளிக்காத நிர்வாகசபை உறுப்பினரொருவர் நிர்வாகசபையிலிருந்து நீக்கப்படுவார்.

    வரைவு 33.
    பொதுச்சபை மற்றும் நிர்வாகசபைக்கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அச்சபைகளின் பெரும்பாண்மைவாக்குக்களால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

    13. யாப்புத்திருத்தம்

    வரைவு 34.
    அமைப்பின் யாப்பில் ஏதாவது மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்யப்பட வேண்டுமென பெரும்பாண்மை பொதுச்சபை கருதுமிடத்தில், குறித்த திருத்தமோ அல்லது மாற்றமோ பற்றிய விரிவான அறிக்கையொன்றை வருடத்தின் தை மாதம் 31ம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் திருத்த அல்லது மாற்ற பிரேரணைகள் அமைப்பின் தலைவரால் வருடாந்த பொதுச்சபைக்கூட்டத்தில் முன்வைக்கப்படுதல் வேண்டும். எந்தவொரு யாப்பு திருத்தத்திற்கும் பொதுச்சபையின் பெரும்பாண்மையுடன், பெரும்பாண்மை ஸ்தாபக அங்கத்தவர்களின் கூட்டான ஒப்புதலும் பெறப்பட வேண்டும்.

    14. அமைப்பைக் கலைத்தல்

    வரைவு 35.
    இவ் அமைப்பானது தனது இலக்கினை முழுமையாக அடைந்துவிட்டதாக அனைவராலும் கருதப்படும் பட்ச்சத்திலும், அமைப்பின் செயற்பாடும் அதன் இயக்கமும் தேவையற்றது என பெரும்பாண்மை உறுபினர்கள் கருதும் பட்ச்சத்திலும், பொதுச்சபை யைக்கூட்டி பொதுச்சபையின் பெரும்பாண்மை பலத்துடனும், ஸ்தாபக அங்கத்தவர்களின் ஒப்புதலுடனும் அமைப்பைக் கலைக்க முடியும். அமைப்பு கலைக்கப்பட்டபின்னர் அமைப்பின் அனைத்து சட்டபூர்வமான பதிவுகளும் இரத்துச்செய்யப்படுதல் வேண்டும். அமைப்பு கலைக்கப்படும்பொழுது அமைப்பின் உடமைகளும், வங்கிக்கணக்கிலிருக்கும் அத்தனை நிதியும் இலங்கையில் நல்லமுறையில் இயங்கிகொண்டிருக்கும் ஒரு தொண்டர் நிறுவனத்திடம் கையளிக்கப்படுதல் வேண்டும்.

    15. இணைப்பு
    ஸ்தாபக அங்கத்தவர்களின் பெயர், முகவரி மற்றும் கையொப்பங்கள்.

    இவ்வண்ணம்
    செயலாளர்
    புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனம் – சுவிற்சர்லாந்து

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை”!. சினிமாப் பாடல்கள் மூலம் வரிகளை தெளிவு படுத்தும் போது இலகுவானது. இனப்பெருமை மதப்பெருமை தனது நாட்டைப் பற்றியது… முறையே முதாலித்துவ சுயநலத்தால் உருவாக்கப் பட்டவை அல்லது உருவாகி வந்தவை. உழைப்பாளிகளின் நலன்களை அவர்கள் பாதுகாப்பை பிரதிபலிப்தாக இருந்தால் அவர்களுக்குகென்று ஒரு ஸ்தாபனம் வேண்டும். கட்சி வேண்டும். இல்லையேல் பிரச்சனைகள் தொடுவானம் போல் அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போகும்.
    நல்லதொரு இலக்கைநோக்கி முன்னேற எனது வாழ்த்துக்கள் “தேசம்நெற்” க்கும் அதன் வாசகர்களுக்கும்.

    Reply
  • palli
    palli

    நல்லதொரு இலக்கைநோக்கி முன்னேற எனது வாழ்த்துக்கள் “தேசம்நெற்” க்கும் அதன் வாசகர்களுக்கும்.
    பல்லி,,,,,,,,,,,,

    Reply
  • babu
    babu

    கலாமோகன் சொல்ல வந்துள்ள அமைப்புக்கும் இங்கே குறிப்பிடப்படும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான தீர்மானங்களும் வெவ்வேறானவை – இங்கே எடுக்கப்படும் முயற்சி சமூக சேவை நிறுவனமாக அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்பு அல்ல!

    Reply
  • LUCKY
    LUCKY

    வாழ்த்துக்கள்… தொடரட்டும் சமூகப் பணி
    எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    Reply
  • raman
    raman

    ஜெயபாலனின் கவனத்திற்கு,

    மேல் குறிப்பிட்ட கட்டுரையில் வியூகம் ஆசிரியர் ரகுமான் ஜான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள், நான் அறிந்த வரையில் வியூகம் ஆசிரியர் குழுவைக் கொண்டுள்ளது.

    Reply
  • Kalamohan
    Kalamohan

    //babu on August 8, 2010 12:12 am
    கலாமோகன் சொல்ல வந்துள்ள அமைப்புக்கும் இங்கே குறிப்பிடப்படும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான தீர்மானங்களும் வெவ்வேறானவை – இங்கே எடுக்கப்படும் முயற்சி சமூக சேவை நிறுவனமாக அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்பு அல்ல!//

    அப்ப திரு. பாபு அவர்களே, நீங்க சொல்லுறதைப் பார்த்தால், நீங்க ஏட்டுச் சுரக்காய்ப் பேராசிரியர்கள், ஆனால் மற்றவர்கள் புத்தகத்தை தவிர, எதுவும் சிந்திக்கத் தெரியதவர்கள், நீங்க சொல்லுறதையும், எழுதிறதையும், எழுத்தறிவுள்ள எல்லா இலங்கையர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெண்ட மாதிரி இருக்கு. என்ன இந்த நினைப்பு வாறத்திற்கு, உங்கட சொந்த பந்தம் ஏதாச்சும் இலங்கையில இருக்கோ?

    Reply