அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சிறுவர் மேம்பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பிரிந்து பிளவுபட்டு இருப்பது அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் மு.கா.வின் இந்தத் தீர்மானத்தை முழு மையாக வரவேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். மு. கா.வின் இந்த செயற்பாடானது முஸ்லிம்கள் பற்றிய நல் லெண்ணத்தை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் ஏற்படுத்தியுள் ளது. முஸ்லிம்கள் எமது அரசியல் உரிமைகளையும் தேவைகளையும் அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே பொருத்தமானதாகும்.
முரண்பட்ட அரசியல் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண முடியாது என்று தெரி வித்த பிரதியமைச்சர், இந்தத் தீர்மானத் திற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள் வதாகவும் குறிப்பிட்டார்