நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நீர்வேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிழந்தார். நீர்வேலி இராசபாதையில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றது. யாழ். நகரிலிருந்து சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தோடு மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரான அனலைதீவைச் சேர்ந்த கு. நிர்மலன் (வயது-25) என்பவரே உயிழந்தார். அவரோடு பயணித்த இன்னொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *