ஆசிரிய இடமாற்றங்களில் தலையிடுவதை அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்- ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஅரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு ஆசிரிய இடமாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் ஆசிரிய இடமாற்றங்களில் தலையிட்டு எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக செயற்படக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்திற்கென புதிதாக 500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

ஆசிரியர்கள் மதத் தலைவர்களுக்கு அடுத்த படியாக சமூக கெளரவத்தையும் மதிப்பை யும் பெற்றுக்கொள்பவர்கள். அந்த கெளரவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொண்டு மாணவர்களுக்கு நண்பர்களாக, சகோதரர்களாக சில வேளைகளில் பெற் றோர்களாகவும் அன்பு காட்டி வழி நடத்துவது முக்கியமாகும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தம்மிடம் கற்கும் மாணவர்களை சமூகத்தின் உயர் பிரஜைகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரிய ஆசிரியைகள் பல்வேறு கட்சிகள், கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். எனினும், பாடசாலையில் அவர்கள் அதனைப் பாராட்டக்கூடாது. சகலரையும் சமமாக வழி நடத்துவதற்கும் சிறந்த நல்லொழுக்க முள்ள பரம்பரையை உருவாக்குவதற்கும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் சமீப காலமாக ஊவாவிற்கு மட்டும் 5000ற்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்துள்ளது. ஊவா மாகாண பாட சாலைகளைப் பொறுத்தவரையில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் கொழும்பில் 21 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரே கற்பித்தலில் ஈடுபடுகின்றனர்.

இந்த வகையில் இங்கு ஆசிரியர் களுக்கான குறைபாடு இருக்க முடியாது. உள்ள ஆசிரியர்களை முறையாகப் பகிர் ந்துகொண்டால் இன்றுள்ள பிரச்சினை களுக்கும் தீர்வு கிட்டும் என்பது எனது நம்பிக்கை.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 45, 000 ஆசிரியர்களை புதிதாக நியமித்துள்ளது. எனினும், நியமனங்கள் கிடைத்து சில மாதங்களிலேயே ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்று விடுகன்றனர். அவர்களுக்கு ஆசிரிய தொழிலின் பெறுமதி தெரிய வில்லை என்றே கருத முடிகிறது.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் கவனமெடுக்க வேண்டும். தமது விருப்பு வாக்குகளை இலக்காகக் கொண்டு ஆசிரியர்களுக்கு மாற்றம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தாம தமாவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கல்வித்துறையை மேம்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் பதவியேற்ற காலத்தில் நாட்டில் 05 வீதமானோரே கணனி அறிவைக் கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 45 வீதமாக அதிகரித்துள்ளது என்றார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    உங்கள் அனைத்து அதிகாரம்பொருந்திய அதிகாரத்தை பாவித்து இதை ஒரு சட்டமாகவே போடலாம்; கண்டிப்பாக எதிர்கால கல்வியாளர்கள்
    உங்களை வாழ்த்துவார்கள்? கல்வியும் வளரும்: உங்கள் இந்த செயலுக்கு பல்லியின் பாராட்டுக்கள்.

    Reply