யாழ் நகரின் பல வீதிகளில் அதிகளவு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்தில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். நகரின் பிரதான வீதிகளில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கமாறும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வாகனப் பயன்பாட்டளர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதாலும், தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கனங்களும் அதிகரித்துள்ளதாலும் யாழ். நகரில் வாகனங்களின் நெரிசல் என்றுமில்லாதவாறு அதகரித்துள்ளது. இதனால் விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.