அம்புலன்ஸ் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் காயம்.

நோயாளியை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் காயமடைந்தார். மந்திகை வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிறு மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்குச் சொந்தமான இந்த அம்புலன்ஸ் வாகனம் மந்திகை வைத்தியசாலை நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கோப்பாய் பகுதியிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

யாழ்.குடாநாட்டு வீதிகளிலும், யாழ். ஏ-9 பாதையிலும் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றமையும், இவ்வீதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதே இதற்குக் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *