வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 அகதி முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 2இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 இடைத்தங்கள் முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டுவிட்டதாக மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்கியிருந்த மக்களில் இன்னும் 27 ஆயிரம் பேரே எஞ்சியுள்ள ஐந்து முகாம்களிலும் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எஞ்சியுள்ளவர்களும் இவ்வருட இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுவிடுவர் எனவும், அதன் பின்பு வவுனியாவில் அகதி முகாம்கள் எவையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.தென்மராட்சியிலுள்ள அல்லாரை முகாமில் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தங்கியுள்ளனர் எனபதும் தற்போது வடமராட்சிக்கிழக்கு மக்கள் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *